India
பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாக கூறி, ரூ.1 லட்சம் மோசடி.. மந்திர சடங்குகளை நம்பியவருக்கு நேர்ந்த கதி!
மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியைச் சேர்ந்தவர் பங்கஜ் பவார். இவர் விமான போக்குவரத்துத் துறையின் முன்னாள் ஊழியர் ஒருவரைச் சந்தித்துள்ளார். அப்போது அவரிடம் ரூபாய் ஒரு லட்சம் பணத்தை கொடுத்தால் அதற்கு மந்திரங்கள் சொல்லி பணத்தை இரட்டிப்பாக்கித் தருகிறேன் என கூறியுள்ளார்.
இவரின் இந்தப் பேச்சை அவர் நம்பியும், பணம் இரட்டிப்பாகும் என்ற ஆசையின் காரணமாக ரூபாய் ஒரு லட்சத்தை பங்கஜ் பவாரிடம் கொடுத்துள்ளார். அப்போது அவரிடம் கண்களை மூடி நான் சொல்லும் மந்திரங்களை உச்சரித்துக்கொண்டே இருங்கள் என கூறியுள்ளார்.
இதையடுத்து அவரும் கண்களை மூடிக்கொண்டு மந்திரங்களை உச்சரித்துக்கொண்டே இருந்துள்ளனர். பின்னர் சிறிது நேரம் கழித்து கண்ணைத் திறந்து பார்த்தபோது அங்கு பங்கஜ் பவார் காணவில்லை. மேலும் அங்கிருந்த ரூபாய் ஒரு லட்சம் பணமும் அங்கு இல்லை.
பின்னர், தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து பங்கஜ் பவாரை தேடி வருகின்றனர்.
Also Read
-
நீதித்துறையை விமர்சித்த சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு! : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
-
"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் மிக பெரிய வரலாறு இது" - அமைச்சர் துரைமுருகன் பெருமிதம் !
-
”அரசாங்கத்தின் மூலதனம் பொதுப்பணித்துறை” : அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!
-
"கேள்வி கேட்பது தேசத்துரோகமாக கருதப்பட்டால் ஜனநாயகம் இருக்காது" - பாஜக அரசுக்கு முதலமைச்சர் கண்டனம் !
-
"ஆளுநர்கள் மசோதாக்கள் மீது தங்களது தனி விருப்பத்தை பயன்படுத்துகின்றனர்" - உச்சநீதிமன்றம் அதிருப்தி !