India
பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாக கூறி, ரூ.1 லட்சம் மோசடி.. மந்திர சடங்குகளை நம்பியவருக்கு நேர்ந்த கதி!
மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியைச் சேர்ந்தவர் பங்கஜ் பவார். இவர் விமான போக்குவரத்துத் துறையின் முன்னாள் ஊழியர் ஒருவரைச் சந்தித்துள்ளார். அப்போது அவரிடம் ரூபாய் ஒரு லட்சம் பணத்தை கொடுத்தால் அதற்கு மந்திரங்கள் சொல்லி பணத்தை இரட்டிப்பாக்கித் தருகிறேன் என கூறியுள்ளார்.
இவரின் இந்தப் பேச்சை அவர் நம்பியும், பணம் இரட்டிப்பாகும் என்ற ஆசையின் காரணமாக ரூபாய் ஒரு லட்சத்தை பங்கஜ் பவாரிடம் கொடுத்துள்ளார். அப்போது அவரிடம் கண்களை மூடி நான் சொல்லும் மந்திரங்களை உச்சரித்துக்கொண்டே இருங்கள் என கூறியுள்ளார்.
இதையடுத்து அவரும் கண்களை மூடிக்கொண்டு மந்திரங்களை உச்சரித்துக்கொண்டே இருந்துள்ளனர். பின்னர் சிறிது நேரம் கழித்து கண்ணைத் திறந்து பார்த்தபோது அங்கு பங்கஜ் பவார் காணவில்லை. மேலும் அங்கிருந்த ரூபாய் ஒரு லட்சம் பணமும் அங்கு இல்லை.
பின்னர், தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து பங்கஜ் பவாரை தேடி வருகின்றனர்.
Also Read
-
ரூ.3 ஆயிரத்துடன் கூடிய தமிழர் திருநாள் ‘பொங்கல்’ பரிசுத் தொகுப்பு! : திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர்!
-
“‘தான் திருடி, பிறரை நம்பார்’ என்பதைப் போன்றவர்தான் எடப்பாடி பழனிசாமி!” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டத்தை கண்டு ஒப்பாரி ஓலமிடும் பழனிசாமி : அமைச்சர் ரகுபதிக்கு பதிலடி!
-
திண்டுக்கல் மாவட்டத்தில் 2,62,864 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: 212 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்!
-
“நீங்கள் மற்றவர்களுக்கு Inspire ஆக இருக்க வேண்டும்”: மாணவர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!