India
ஸ்நாக்ஸ் சாப்பிட்டதால் திட்டிய ஆசிரியர்.. விபரீத முடிவெடுத்த பள்ளி மாணவி- கடிதத்தில் இருந்தது என்ன?
பெங்களூருவை சேர்ந்த சிறுமி ரம்யா மூர்த்தி. இவர் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு பள்ளியின் வகுப்பறையில் ரம்யா நொறுக்குத்தீனி சாப்பிட்டுள்ளார்.
இதைப்பார்த்த ஆசிரியர் அவரை கண்டித்து பள்ளி தலைமையாசிரியரிடம் கூட்டிச் சென்றுள்ளார். அப்போது அவரும் பெற்றோரை வரவழைத்து மாணவியைத் திட்டியுள்ளார். இதனால் பள்ளியின் தலைமையாசிரியர் மீது மாணவியின் பெற்றோர் மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதனால் மாணவிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் மனவுளைச்சலடைந்த மாணவி நேற்று முன்தினம் ஓடும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
மேலும் தற்கொலைக்கு முன்பு கடிதம் ஒன்றையும் அம்மாணவி எழுதியுள்ளார். இதை போலிஸார் கைப்பற்றியுள்ளனர். அந்தக் கடிதத்தில், பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் தொல்லை காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக எழுதியிருந்ததாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரியர்கள் தொல்லை கொடுத்ததால் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
6 புதிய சமத்துவபுரங்கள்: சாலை, பாலங்கள்- புதிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.348.59 கோடி செலவில் அரசு மருத்துவமனை கட்டடங்கள்: மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
ஆய்வாளர்களுக்கான உதவித் தொகை வழங்குவதில் ஏன் தாமதம்? : கனிமொழி MP கேள்விக்கு ஒன்றிய அரசு அளித்த பதில்!
-
கும்மிடிப்பூண்டியில் 2,104 பேருக்கு வேலைவாய்ப்பு! : புதிய உற்பத்தி ஆலையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
“சிவந்தது சென்னை!” - மாமேதை கார்ல் மார்க்ஸ் சிலை திறப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!