India
நண்பனை கல்லால் அடித்து கொலை.. வேறு நண்பருக்கு மெசேஜ் அனுப்பிய வாலிபர் : அதிர்ச்சி சம்பவம்!
மும்பை நகரத்தில் உள்ள அந்தேரி பகுதியைச் சேர்ந்தவர் ராகுல் கெய்க்வாட். இவர் தனது அலுவலகத்தில் வேலை செய்யும் சுஷாந்த் கெய்க்வாட் என்பவருடன் நட்பாகப் பழகிவந்துள்ளார். இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் உள்ளதால் அடிக்கடி சேர்ந்து குடித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இருவரும் சேர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது ராகுலுக்கும், சுஷாந்துக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சுஷாந்த் அங்கிருந்த கல்லை எடுத்து ராகுல் தலையில் அடித்துள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
பின்னர் நண்பனை கொலை செய்து விட்டதாகத் தனது செல்போனில் வேறு நண்பருக்கு மெசெஜ் அனுப்பியுள்ளார். பின்னர் அவர் தலைமறைவாகியுள்ளார்.
இந்தச் சம்பவம் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் ராகுல் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து தலைமறைவாக இருந்த சுஷாந்தை போலிஸார் கைது செய்தனர்.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!