India
“ஏன்.. உங்களுக்கு மட்டும்தான் பசிக்குமா?” : கடுப்பான நீதிபதி பிறப்பித்த அதிரடி உத்தரவு!
குஜராத் உயர்நீதிமன்றத்தில் ஆன்லைன் விசாரணையின்போது காவல் ஆய்வாளர் ஒருவர் குளிர்பானம் அருந்தியதால் அவர் 100 குளிர்பானங்களை பார் அசோசியேஷனுக்கு விநியோகிக்க வேண்டும் என தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் சாலையில் இரு பெண்களை காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் தாக்கியது குறித்த வழக்கு அம்மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அரவிந்த் குமார் அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு மீதான விசாரணையில் ஆன்லைன் மூலமாக காவல் ஆய்வாளர் ரத்தோட் ஆஜராகியிருந்தார். விசாரணையின்போது அவர் குளிர்பானம் அருந்தியதை தலைமை நீதிபதி பார்த்துள்ளார்.
இன்ஸ்பெக்டர் குளிர்பானம் குடித்ததற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, “நீங்கள் சாப்பிடுவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் எங்கள் முன்னே நீங்கள் சாப்பிடக்கூடாது. ஏனென்றால் மற்றவர்களும் சாப்பிட ஆசைப்படுவார்கள். அனைவருக்கும் கொடுக்க வேண்டும் அல்லது சாப்பிடக்கூடாது.” எனத் தெரிவித்தார்.
மேலும், 100 குளிர்பானங்களை வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு வழங்கவும், இல்லையெனில் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
முன்னதாக, சில நாட்களுக்கு முன்னர் இதேபோல் ஒரு வழக்கறிஞர் விசாரணையின் போது சமோசா சாப்பிட்டதை பார்த்த நீதிபதி அனைவருக்கும் சமோசாவை பகிரும்படி கூறியது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!