India

பெற்றோர் கண்முன்னே 3 வயது குழந்தை குத்திக் கொலை.. குற்றவாளி வீட்டிற்கு தீ வைத்த பொதுமக்கள்: நடந்தது என்ன?

அசாம் மாநிலம், ஷியாமசரன்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சல்மான் உதின் லஸ்கர். இவரது மனைவி ஹஃப்சனா பேகம் லஸ்கர். இந்த தம்பதிக்கு மூன்று வயதில் ஆண் குழந்தை இருந்தது.

இந்நிலையில் நேற்று வீட்டிற்கு வந்த முதியவர் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை தூக்கிக்கொண்டு வெளியே ஓடினார். இதைப் பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து அவரை பின் தொடர்ந்து சென்றனர்.

பின்னர் திடீரென அந்த முதியவர் குழந்தையை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பிக்க முயன்றார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அவரை மடக்கிப் பிடித்தனர். மேலும் அந்த முதியவர் அதே கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரது வீட்டை பொதுமக்கள் தீவைத்து கொளுத்தினர்.

இதுபற்றி அறிந்த போலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் பொதுமக்களிடம் இருந்து அந்த முதியவரை மீட்டு விசாரணை செய்தபோது அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்தனர்.

"தனது குழந்தையைக் கொன்றவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்தாலும் அவருக்குக் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்" என குழந்தையின் தாய் தெரிவித்துள்ளார். மேலும், இந்த முதியவர் சில ஆண்டுகளுக்கு முன்பு மூதாட்டி ஒருவரை கொலை செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: மைனர் பெண்ணை ரேப் செய்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்த திட்டம் : விமானம் ஏறும் போது சிக்கிய டிராவல் ஏஜென்ட்!