India
கோரிக்கையை நிறைவேற்றாத அதிகாரி.. முகத்தில் கருப்பு மை ஊற்றிய பெண்கள்: நடந்தது என்ன?
ஆந்திர மாநிலம் அமராவதி நகரில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதையில் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் உடனே கசிவை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால், நகராட்சி நிர்வாகம் மக்களின் கோரிக்கைக்குச் செவி கொடுக்காமல் நாட்களைக் கடத்தி வந்துள்ளது. இந்நிலையில் நகராட்சி ஆணையர் பிரவீன் அஷ்டிகார் அப்பகுதியில் சாலைப் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காகச் சென்றிருந்தார்.
அப்போது, அங்கு வந்த மூன்று பெண்கள் தாங்கள் எடுத்து வந்திருந்த கருப்பு மையை நகராட்சி ஆணையர் முகத்தில் வீசினர். இதனால் அவரது முகம் முழுவதும் கருப்பாக மாறியது. இதையடுத்து போலிஸார் அதிகாரியை அங்கிருந்து கூட்டிச் சென்றனர்.
நகராட்சி அதிகாரி மீது கருப்பு மை வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
"ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்" - முதலமைச்சர் உறுதி !
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !
-
காவலர் வீரவணக்க நாள் விழா : 175 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
தொடங்கிய வடகிழக்கு பருவமழை... தென்சென்னை பகுதியில் துணை முதலமைச்சர் ஆய்வு!