India
”பாம்புடன் முட்டி மோதி தன்னை வளர்த்தவர்களை காப்பாற்றிய செல்லப்பிராணி” - புதுச்சேரியில் நடந்த நெகிழ்ச்சி!
புதுச்சேரியில் வீட்டுக்குள் புகுந்த கொடிய விஷமுள்ள கண்ணாடி விரியன் பாம்பை, தடுத்து போராடி கொன்று தன்னை வளர்த்த எஜமானரின் குடும்பத்தை காப்பாற்றிய நாயின் செயல் சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, புதுச்சேரி அருகே மூலக்குளம் ஆசிரியர் காலனியை சேர்ந்த ரமணி என்ற கல்வித்துறை அதிகாரி.
இவரது வீட்டிற்குள் புக முயன்ற விஷப்பாம்பை, அவரது வளர்ப்பு நாயான மிஸ்ட்டி போராடி கொன்றிருக்கிறது.
மேலும் பாம்பு கடித்து விஷம் ஏறியதால் நாய்க்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், கால்நடை மருத்துமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது நாய் நலமுடன் உள்ளது.
வீட்டுக்குள் புகுந்த கொடிய விஷமுள்ள கண்ணாடி விரியன் பாம்பை தடுத்து போராடி கொன்று தன்னை வளர்த்த எஜமானரின் குடும்பத்தையே நாய் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!