India
”பாம்புடன் முட்டி மோதி தன்னை வளர்த்தவர்களை காப்பாற்றிய செல்லப்பிராணி” - புதுச்சேரியில் நடந்த நெகிழ்ச்சி!
புதுச்சேரியில் வீட்டுக்குள் புகுந்த கொடிய விஷமுள்ள கண்ணாடி விரியன் பாம்பை, தடுத்து போராடி கொன்று தன்னை வளர்த்த எஜமானரின் குடும்பத்தை காப்பாற்றிய நாயின் செயல் சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, புதுச்சேரி அருகே மூலக்குளம் ஆசிரியர் காலனியை சேர்ந்த ரமணி என்ற கல்வித்துறை அதிகாரி.
இவரது வீட்டிற்குள் புக முயன்ற விஷப்பாம்பை, அவரது வளர்ப்பு நாயான மிஸ்ட்டி போராடி கொன்றிருக்கிறது.
மேலும் பாம்பு கடித்து விஷம் ஏறியதால் நாய்க்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், கால்நடை மருத்துமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது நாய் நலமுடன் உள்ளது.
வீட்டுக்குள் புகுந்த கொடிய விஷமுள்ள கண்ணாடி விரியன் பாம்பை தடுத்து போராடி கொன்று தன்னை வளர்த்த எஜமானரின் குடும்பத்தையே நாய் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Also Read
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!