India
”பாம்புடன் முட்டி மோதி தன்னை வளர்த்தவர்களை காப்பாற்றிய செல்லப்பிராணி” - புதுச்சேரியில் நடந்த நெகிழ்ச்சி!
புதுச்சேரியில் வீட்டுக்குள் புகுந்த கொடிய விஷமுள்ள கண்ணாடி விரியன் பாம்பை, தடுத்து போராடி கொன்று தன்னை வளர்த்த எஜமானரின் குடும்பத்தை காப்பாற்றிய நாயின் செயல் சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, புதுச்சேரி அருகே மூலக்குளம் ஆசிரியர் காலனியை சேர்ந்த ரமணி என்ற கல்வித்துறை அதிகாரி.
இவரது வீட்டிற்குள் புக முயன்ற விஷப்பாம்பை, அவரது வளர்ப்பு நாயான மிஸ்ட்டி போராடி கொன்றிருக்கிறது.
மேலும் பாம்பு கடித்து விஷம் ஏறியதால் நாய்க்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், கால்நடை மருத்துமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது நாய் நலமுடன் உள்ளது.
வீட்டுக்குள் புகுந்த கொடிய விஷமுள்ள கண்ணாடி விரியன் பாம்பை தடுத்து போராடி கொன்று தன்னை வளர்த்த எஜமானரின் குடும்பத்தையே நாய் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Also Read
-
1,256 முகாம்கள்.. 18 லட்சம் பேர் பயன்.. மக்களின் அமோக ஆதரவோடு முடிவுற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம்!
-
11 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : கிராமக் கோயில் பூசாரிகள் மகிழ்ச்சி!
-
ஆன்மீக அன்பர்களும் இறை பற்றாளர்களும் விரும்பும் அரசு திராவிட மாடல் அரசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
-
தமிழ்நாட்டின் முதல் இரவு வான் பூங்கா : எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது? - 5 சிறப்புகள்!
-
‘நீதித்துறையில் ஊழல்’ என NCERT பாடத்தில் சர்ச்சை… நீதித்துறைக்கு பகிரங்கமான மிரட்டல் - முரசொலி தலையங்கம்!