India
”பாம்புடன் முட்டி மோதி தன்னை வளர்த்தவர்களை காப்பாற்றிய செல்லப்பிராணி” - புதுச்சேரியில் நடந்த நெகிழ்ச்சி!
புதுச்சேரியில் வீட்டுக்குள் புகுந்த கொடிய விஷமுள்ள கண்ணாடி விரியன் பாம்பை, தடுத்து போராடி கொன்று தன்னை வளர்த்த எஜமானரின் குடும்பத்தை காப்பாற்றிய நாயின் செயல் சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, புதுச்சேரி அருகே மூலக்குளம் ஆசிரியர் காலனியை சேர்ந்த ரமணி என்ற கல்வித்துறை அதிகாரி.
இவரது வீட்டிற்குள் புக முயன்ற விஷப்பாம்பை, அவரது வளர்ப்பு நாயான மிஸ்ட்டி போராடி கொன்றிருக்கிறது.
மேலும் பாம்பு கடித்து விஷம் ஏறியதால் நாய்க்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், கால்நடை மருத்துமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது நாய் நலமுடன் உள்ளது.
வீட்டுக்குள் புகுந்த கொடிய விஷமுள்ள கண்ணாடி விரியன் பாம்பை தடுத்து போராடி கொன்று தன்னை வளர்த்த எஜமானரின் குடும்பத்தையே நாய் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Also Read
-
கருப்புக்கொடி போராட்டம் டிரெயிலர்தான் மெயின் பிக்சரை பார்க்க ஆசைப்பட கூடாது - CM MK Stalin எச்சரிக்கை!
-
தமிழ்நாட்டு மண் ஒருநாளும் பாஜகவின் ஆணவத் திமிருக்கு அடிபணியாது: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி!
-
#Delimitation : தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் தீ பரவட்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
‘ரெஸ்ட்’ இல்லாமல் உழைக்கும் பெண்களுக்கு தரும் ‘ரெஸ்பெக்ட்’ உரிமைத்தொகை : சேலத்தில் முதலமைச்சர் பேச்சு!
-
”தொகுதி மறுவரையறை மசோதா.. வடக்கில் வென்று ஆட்சியை பிடிக்கலாம் என்ற நினைப்பு” : முரசொலி விமர்சனம்!