India
“அரசு அதிகாரிகள் மீது பெட்ரோலை ஊற்றி எரிக்க முயன்ற முன்னாள் பாஜக MLA”: பரபரப்பு சம்பவத்தின் பின்னணி என்ன?
மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள பச்சோர் பகுதியில் சாலை ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, வட்டாட்சியர் ராஜேஷ் சோர்டே தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் இந்தப் பணியை மேற்கொண்டுள்ளனர். அப்போது அங்குவந்த மத்தியப் பிரதேச மாநில பா.ஜ.க முன்னாள் எம்.எல்.ஏ பகவான் சிங் ராஜ்புத், ஆக்கிரமிப்பு அகற்றத்தை கைவிடுமாறு வட்டாட்சியரை எச்சரித்துள்ளார்.
பின்னர், தன் கையில் வைத்திருந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை வட்டாட்சியர் ராஜேஷ் சோர்டே மீதும், ஆக்கிரமிப்பு தடுப்புப் பிரிவினர் மீதும் ஊற்றி, அவர்கள் மீது தீ வைத்து எரிக்கும் முயற்சியிலும் பகவான் சிங் இறங்கியுள்ளார்.
இதுதொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து தலைமை நகராட்சி அதிகாரி பவன் மிஸ்ரா, காவல்துறையினரிடம் புகார் அளித்தார். அதைத் தொட ர்ந்து, தற்போது பா.ஜ.க முன்னாள் எம்.எல்.ஏ பகவான் சிங் ராஜ்புத் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Also Read
-
இன்றுடன் ஓராண்டாக நீடிக்கும் மணிப்பூர் வன்முறை : வேடிக்கை பார்க்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
வயநாடு தொடர்ந்து மற்றொரு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி : எந்த தொகுதி? என்ன காரணம்?
-
மணிப்பூர் வன்முறை - கைகட்டி வேடிக்கை பார்த்த ஒன்றிய பா.ஜ.க. அரசும் குற்றவாளி அல்லவா? : முரசொலி!
-
3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை : முன்ஜாமீன் கோரிய முன்னாள் அமைச்சர் ரேவண்ணா - கர்நாடக அரசியலில் அதிர்ச்சி !
-
மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் புகார் - மோடி கொல்கத்தா நேரத்தில் செல்லும் வெளிவந்த அதிர்ச்சி !