India
’பாஜக ஆட்சியால் எங்கள் வாழ்க்கைத் தரமே மோசமாகிவிட்டது’ சி-வோட்டர் கருத்துக்கணிப்பில் மக்கள் குற்றச்சாட்டு
நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்ற பிறகு சாமானிய மக்களின் வாழ்க்கைத்தரம் மோசம் அடைந்துள்ளதாக சி-வோட்டர் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
ஒன்றிய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக, நாட்டின் பணவீக்கம் மற்றும் பொருளாதார நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து நாடு தழுவிய கருத்துக் கணிப்பை சி-வோட்டர் நிறுவனம் மேற்கொண்டது.
அதன்படி மூவாயிரம் பேரிடம் நடத்தப்பட்ட இந்தக் கருத்துக் கணிப்பில், 62.4 சதவிகிதம் பேர், பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு பணவீக்கம் கட்டுப்படுத்தப்படவில்லை என்றும் இதனால், விலைவாசி உயர்ந்திருப்பதாகக் கூறியுள்ளனர்.
மேலும், பொருளாதார நடவடிக்கைகளைப் பொறுத்தவரை ஒன்றிய பா.ஜ.க அரசின் செயல்பாடுகள் எதிர்பார்த்ததை காட்டிலும் படுமோசம் என 38 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஓர் ஆண்டில் சாமானிய மக்களின் வாழ்க்கைத் தரம் பற்றிய கேள்விக்கு 42.4 சதவிகிதம் பேர் மோசம் என்று கூறியுள்ளனர்.
நன்றி - முரசொலி நாளேடு
Also Read
-
காவிக்கூட்டத்தையும், துரோகிகளையும் ஓட ஓட விரட்டும், Dravidian Stock கூட்டம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
மாநில முதலமைச்சரை இப்படித்தான் நடத்த வேண்டுமா? : ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
“சுயலாபத்திற்காக செயல்படுகிறார் Watchman பழனிசாமி!” : கழக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் ராஜீவ் காந்தி கண்டனம்!
-
நாளை (ஜூலை 15) முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்! : மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
-
#சங்கி_பழனிசாமி : சமூகவலைதளத்தில் வைரலாகும் ஹேஷ்டாக்!