India
காதலை முறித்து கொண்ட காதலி.. WHATSAPP-ல் வீடியோ வெளியிட்டு காதலன் தற்கொலை : விசாரணையில் ‘பகீர்’ தகவல்!
ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சங்கர் ராவ். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது. இதையடுத்து சங்கர் ராவ் தனது கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இரண்டு வருடங்காலாக காதலித்து வந்துள்ளனர். அப்போது அந்த பெண்ணுக்குப் பணம், நகைகள், ஆகியவற்றை சங்கர் ராவ் வழங்கியுள்ளார்.
இந்நிலையில் அந்தப் பெண் சங்கர் ராவுடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். இது குறித்து அவர் அந்த பெண்ணிடம் கேட்ட போது 'உன்னைப் பிடிக்கவில்லை' என கூறியுள்ளார். இதனால் சங்கர் ராவ் மனமுடைந்துள்ளார்.
இதையடுத்து தனது வாட்ஸ் அப்பில் உள்ள நண்பர்களுக்கு வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். இதில் தன்னை காதலித்த பெண் பணம், நகை ஆகியவற்றை வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டதாகவும், நான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
பின்னர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து போலிஸார் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
“கைகட்டி வேடிக்கை பார்ப்போம் என்று நினைத்தார்களா? தமிழ்நாடு தலைகுனியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
நிதி ஒதுக்காமல் ஏமாற்றும் பிரதமர் மோடி : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்தது தமிழ்நாடு!
-
“இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்” - 80வது முறை கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்!
-
கொருக்குப்பேட்டை மேம்பாலம் திறப்பு... எண்ணூர் மேம்பாலத்துக்கு அடிக்கல்.. ஒரே நேரத்தில் அசத்திய முதல்வர்!
-
எகிப்தின் பிரமிடு கல்லறைகளில் தமிழ்-பிராமி கல்வெட்டுகள் : உலகம் தழுவிய தமிழ் - அமைச்சர் தங்கம் தென்னரசு!