India
காதலை முறித்து கொண்ட காதலி.. WHATSAPP-ல் வீடியோ வெளியிட்டு காதலன் தற்கொலை : விசாரணையில் ‘பகீர்’ தகவல்!
ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சங்கர் ராவ். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது. இதையடுத்து சங்கர் ராவ் தனது கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இரண்டு வருடங்காலாக காதலித்து வந்துள்ளனர். அப்போது அந்த பெண்ணுக்குப் பணம், நகைகள், ஆகியவற்றை சங்கர் ராவ் வழங்கியுள்ளார்.
இந்நிலையில் அந்தப் பெண் சங்கர் ராவுடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். இது குறித்து அவர் அந்த பெண்ணிடம் கேட்ட போது 'உன்னைப் பிடிக்கவில்லை' என கூறியுள்ளார். இதனால் சங்கர் ராவ் மனமுடைந்துள்ளார்.
இதையடுத்து தனது வாட்ஸ் அப்பில் உள்ள நண்பர்களுக்கு வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். இதில் தன்னை காதலித்த பெண் பணம், நகை ஆகியவற்றை வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டதாகவும், நான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
பின்னர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து போலிஸார் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
"SIR உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம் மட்டுமே" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
-
“S.I.R-க்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்துக் கட்சிகளின் கடமை!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்கு தாக்கல் செய்யும்!: அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!
-
SIR விவகாரம் : முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்... 40 கட்சிகள் பங்கேற்பு! - விவரம்!
-
ஒக்கியம் மடுவு கால்வாயில் ரூ.27 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு!