India
காதலை முறித்து கொண்ட காதலி.. WHATSAPP-ல் வீடியோ வெளியிட்டு காதலன் தற்கொலை : விசாரணையில் ‘பகீர்’ தகவல்!
ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சங்கர் ராவ். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது. இதையடுத்து சங்கர் ராவ் தனது கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இரண்டு வருடங்காலாக காதலித்து வந்துள்ளனர். அப்போது அந்த பெண்ணுக்குப் பணம், நகைகள், ஆகியவற்றை சங்கர் ராவ் வழங்கியுள்ளார்.
இந்நிலையில் அந்தப் பெண் சங்கர் ராவுடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். இது குறித்து அவர் அந்த பெண்ணிடம் கேட்ட போது 'உன்னைப் பிடிக்கவில்லை' என கூறியுள்ளார். இதனால் சங்கர் ராவ் மனமுடைந்துள்ளார்.
இதையடுத்து தனது வாட்ஸ் அப்பில் உள்ள நண்பர்களுக்கு வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். இதில் தன்னை காதலித்த பெண் பணம், நகை ஆகியவற்றை வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டதாகவும், நான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
பின்னர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து போலிஸார் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
”வெற்றி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கே! விழிப்புணர்வு அவசியம்”: கழகத்தினருக்கு முதலமைச்சர் மடல்!
-
அண்ணா மேம்பாலம் தொடங்கி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் வரை.. சென்னையை வளப்படுத்திய திமுக!
-
மீண்டும் கழக ஆட்சி - மக்களின் எழுச்சியே சாட்சி : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை!
-
தெற்காசியாவின் மாடல் மாநிலமாகத் தமிழ்நாட்டை நான் மாற்றிக் காட்டுவேன் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் நிறைவு : நாளை மறுநாள் வாக்குப்பதிவு!