India
சோதனை செய்த போலிஸாரை தாக்கிய கள்ளச்சாராய கும்பல்.. ஆந்திராவில் பரபரப்பு சம்பவம்!
ஆந்திரா மாநிலம், கோதாவரி மாவட்டத்திற்குட்பட்ட ஆலமூர் பகுதி. இந்த பகுதியில் இருக்கும் ஆற்றைப் பயன்படுத்தி கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலிஸாருக்கு புகார் வந்துள்ளது.
இதையடுத்து கோதாவரி ஆற்றுப் பகுதியில் போலிஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது படகு ஒன்று வந்தது. அதை சோதனை செய்தபோது ஐந்துக்கும் மேற்பட்ட பீப்பாய்களில் கள்ளச்சாராயம் இருந்தது. இதையடுத்து போலிஸார் அதைப் பறிமுதல் செய்ய முயன்றனர்.
அப்போது திடீரென படகில் இருந்த கும்பல் போலிஸார் மீது கொடூரமாகத் தாக்குதல் நடத்தியது. இதில் போலிஸாருக்கு காயம் ஏற்பட்டது. இந்த சம்பம் தொடர்பான காட்சிகள் சமூகவலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து போலிஸார் கள்ளச்சாராயம் காய்ச்சி படகில் எடுத்து வந்த 6 பேரை கைது செய்தனர்.
Also Read
-
புகழ்பெற்ற மல்யுத்த வீரரை வீழ்த்திய வீராங்கனை... தோல்வியே சந்திக்காத இந்திய பெண்ணை கௌரவித்த Google!
-
இந்தியப் பெருங்கடலில் பல மடங்கு அதிகரித்த வெப்பநிலை : கால நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கை !
-
பிரஜ்வல் ரேவண்ணாவை பிரதமர் மோடி எதற்காக பாதுகாத்து வருகிறார்? : ராகுல் காந்தி கேள்வி!
-
மேற்கு வங்க ஆளுநர் மீதான பாலியல் புகார் : 8 பேர் கொண்ட குழுவை அமைத்து கொல்கத்தா போலீஸ் உத்தரவு !
-
ஊழியரை இரும்பு ராடால் தாக்கிய வழக்கில் கே.ஜி.எஃப் விக்கி கைது : போலிஸ் அதிரடி!