India
காந்தியின் விருப்ப பாடல் நீக்கம்.. குடியரசு தின விழாவை சிதைக்கும் ஒன்றிய அரசு!
குடியரசு தின விழா முடிந்ததும் ஜனவரி 29ம் தேதி படைகள் பாசறைக்குத் திரும்பும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்நிகழ்ச்சியில் 44 பீகில் வாசிப்பாளர்கள், 16 ட்ரம்பட் இசைக் கலைஞர்கள்,75 ட்ரம்மர்கள் மற்றும் 6 பேண்டு வாத்தியக் கலைஞர்கள் பாடல்களை இசைப்பார்கள்.
இதில், மகாத்மா காந்திக்கு விருப்பமான ’Abide with me’ என்ற பாடல் 1950ம் ஆண்டிலிருந்து இசைக்கப்படு வருகிறது. இந்த முறை நடைபெற உள்ள குடியரசு தின விழா இறுதி நிகழவில் இப்பாடல் நீக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே கடந்த 2020ம் ஆண்டு இந்த பாடல் நீக்கப்பட்டபோது கடும் எதிர்ப்புகள் எழுந்ததை அடுத்த 2021ம் ஆண்டு மீண்டும் Abide with me பாடல் இடம் பெற்றது. தற்போது மீண்டும் இந்தப்பாடலை ஒன்றிய அரசு நீக்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஹென்ரி பிரான்சிஸ் லைட் என்பவர் 1847ல் Abide with me பாடலை இயற்றினார். காசநோயால் பாதிக்கப்பட்டிருந்த அந்த நபர் உயிர் பிரியும் வேதனையில் இருந்தபோது எழுதிய பாடல் இது. மகாத்மா காந்திக்கு இந்த கிறிஸ்துவப் பாடல் மிகவும் பிடித்த பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“முதல்முறையாக கூட்டுறவுக்காகவே ‘கூட்டுறவு கீதம்!’ இயற்றப்பட்டுள்ளது!” : அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்!
-
ரோடு ஷோ - தமிழ்நாடு அரசின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் என்ன?
-
பீகார் தேர்தல் - குளறுபடிகளுக்கு இடையே நிறைவடைந்த முதற்கட்ட வாக்குப்பதிவு! : 2ஆம் கட்டத் தேர்தல் எப்போது?
-
”NDA கூட்டணி அரசை பீகார் மக்கள் தூக்கி எறிவார்கள்” : பரப்புரையில் பிரியங்கா காந்தி MP பேச்சு!
-
தமிழ்நாடு முழுவதும் நவ.11 அன்று SIR-க்கு எதிராக ஆர்ப்பாட்டம்! : மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி அறிவிப்பு!