India
இளைஞரை கடத்தி கொலை செய்த ரவுடி.. சடலத்தை காவல் நிலையத்தில் வீசிச் சென்ற கொடூரம்: கேரளாவில் பகீர் சம்பவம்!
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷான் பாபு. இளைஞரான இவரை கடந்த 16ம் தேதி ஜோமன் என்ற ரவுடி கடத்திக் சென்றதாகக் கூறி காவல்நிலையத்தில் அவரது தாயார் புகார் செய்தார். இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக ஷான் பாபுவை தேடிவந்தனர்.
இந்நிலையில், கோட்டையம் காவல் நிலையத்தில், கொலை செய்யப்பட்ட ஷான் பாபுவின் உடலை ரவுடி ஜோமன் வீசிச் சென்றுள்ளார். இதைப்பார்த்து போலிஸார் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் உடனே தலைமறைவாக இருந்த ரவுடி ஜோமனை போலிஸார் கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், போதைப் பொருட்கள் விற்பனையில் இரு கும்பலுக்கு ஏற்பட்டுள்ள முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் ஜோமன் மற்றும் சூரியன் ஆகிய இரண்டு ரவுடிகளுக்கும் இடையே பகை இருந்துள்ளது. கொலை செய்யப்பட்ட இளைஞர் ஷான் பாபு, ரவுடி சூரியனுக்கு நண்பர் ஆவார். இதனால் அவரை பழிவாங்கும் நோக்கில் ஷாமன் பாவுவை கடத்தி கொலை செய்தாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இரண்டு ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!