India
சொந்த நிலத்தில் உள்ள மசூதியை 54 ஆண்டுகளாக பராமரிக்கும் இந்து குடும்பம்.. நெகிழ வைக்கும் மத நல்லிணக்கம் !
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து 25 கி.மீட்டர் தொலைவில் பராசத் என்னும் கிராமம் உள்ளது. அந்தப் பகுதியில் 50 ஆண்டுகளுக்கு பழமையான அமனாதி மசூதி ஒன்று உள்ளது. இந்த மசூதி அமைந்துள்ள பகுதி பார்த்தசாரதி பாசு என்ற இந்து மதத்தைச் சேர்ந்தவரிடம் இருந்துள்ளது.
மேலும் அந்த மசூதியை பார்த்தசாரதி மற்றும் அவரது நண்பர்கள்தான் பராமரித்து வந்துள்ளனர். 1964ஆம் ஆண்டு நடைபெற்ற இந்து - முஸ்லீம் கலரவத்திற்கு பிறகு பார்த்தசாரதியின் தாத்தா இந்த நிலத்தை வாங்கியுள்ளார்.
ஆனால் வாங்கிய நிலத்தை பார்த்தபோதுதான், அந்த நிலத்தில் மசூதி இருந்தது பார்த்தசாரதியின் தாத்தாவிற்கு தெரியவந்துள்ளது. அந்த மசூதியை இடித்துவிட உறவினர்கள் கூறியபோதும், மசூதியை இடிக்காமல் பார்த்தசாரதியின் தாத்தா தொடர்ந்து பராமரித்து வந்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து பார்த்தசாரதி அந்த மசூதியைச் சுற்றி சுற்றுச்சுவர் எழுப்பி மசூதியை புதுப்பித்து ஆசையுடன் பராமரித்து வந்துள்ளார். இன்றும் கூட அந்த மசூதியில் இஸ்லாமியர்கள் தொழுகை செய்துவருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து பார்த்தசாரதி கூறுகையில், இந்த மசூதி எங்கள் குடும்பத்தின் பெருமை. இங்கு வழிபட நாங்களும் நேரம் வழங்குகின்றோம். அதுமட்டுமல்லாது ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் அன்று இஸ்லாமிய சகோதர்களுடன் ஒன்றாக பண்டிகையைக் கொண்டாடுகின்றோம்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“சங்கரன்கோவில் டூ சுவீடன் - பட்டத்தை சமர்ப்பிக்கிறேன்...” : தென்காசி இளைஞருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
-
பணியாளரை காலணியால் தாக்கிய DIG.. காவல்துறையினரின் அதிகார துஷ்பிரயோகம் : தவெக அரசு மீது சீறும் சண்முகம்!
-
நீட் மோசடி.. NTA அதிகாரிகளுக்கு நேரடி தொடர்பு ? - உச்ச நீதிமன்றத்தில் பகீர் கிளப்பு புதிய மனு!
-
ஓசூர் விமான ஆய்வு மையம் ஆந்திராவுக்கு மாற்றம் : இதனை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது - டி.ஆர்.பி.ராஜா!
-
வீட்டு பால்கனியில் கஞ்சா செடி வளர்த்த தவெக ஆதரவாளர்: இதை வளர்ப்பதால் என்ன தப்பு?- போலீசாரிடம் வாக்குவாதம்