India
ATM பரிவர்த்தனை கட்டணம் உயர்வு... வாடிக்கையாளர்களுக்கு ‘ஷாக்’ - இன்று முதல் அமலுக்கு வந்த மாற்றம்!
வங்கி ATM-மில் ஐந்து முறைக்கு மேல் பணப் பரிவர்த்தனை செய்தால் கட்டணம் பிடித்தம் செய்யப்பட்டு வந்தது. மேலும் கணக்கு வைத்திருக்கும் வங்கியைத் தவிர்த்துப் பிற வங்கி ATM-மில் பணம் எடுத்தாலும் கட்டணம் பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ATM பரிவர்த்தனை கட்டணம் 2020ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து மாற்றியமைக்கப்படுகிறது என்று ஏற்கனவே ரிசர்வ் வங்கி அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று முதல் ATM பரிவர்த்தனை கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதாவது ஏற்கனவே ஐந்து முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.20 பிடித்தம் செய்யப்பட்டு வந்தது.
தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ள கட்டணத்தின் படி ஐந்து முறைக்கு மேல் ATM-மில் பணம் எடுத்தால் ரூ.21 கட்டணம் பிடிக்கப்படும். அதேபோல் பிற வங்கி ஏ.டி.எம்கள் பயன்பாட்டைப் பொறுத்தவரைப் பெருநகரங்களில் 3 பரிவர்த்தனைகளையும், சிறு நகரங்களில் 5 பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ளலாம். மாற்றியமைக்கப்பட்ட இந்த நடைமுறை புத்தாண்டான இன்றிலிருந்தே அமலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
வாக்குப்பதிவு சதவீதத்தில் திடீரென அசாதாரணமான 6 % மாறுபாடு ஏற்பட்டது ஏன்? - சீதாராம் யெச்சூரி கேள்வி !
-
பா.ஜ.க.வினரால் அதிகரிக்கும் பாலியல் வன்முறைகள் : கண்டுகொள்ளாத ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
நிலவின் துருவங்களில் உறைந்திருக்கும் தண்ணீர் : இஸ்ரோவின் ஆய்வில் கிடைத்த உலகை அதிரவைத்த தகவல் !
-
ஜனநாயகத்தன்மையை இழக்கும் இந்தியா : RSF வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
-
உலகப் பத்திரிகை சுதந்திர நாள் ; ஊடகவியலாளருக்கு திராவிட மாடல் அரசு அளித்த உதவிகள் என்னென்ன ?