India
ATM பரிவர்த்தனை கட்டணம் உயர்வு... வாடிக்கையாளர்களுக்கு ‘ஷாக்’ - இன்று முதல் அமலுக்கு வந்த மாற்றம்!
வங்கி ATM-மில் ஐந்து முறைக்கு மேல் பணப் பரிவர்த்தனை செய்தால் கட்டணம் பிடித்தம் செய்யப்பட்டு வந்தது. மேலும் கணக்கு வைத்திருக்கும் வங்கியைத் தவிர்த்துப் பிற வங்கி ATM-மில் பணம் எடுத்தாலும் கட்டணம் பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ATM பரிவர்த்தனை கட்டணம் 2020ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து மாற்றியமைக்கப்படுகிறது என்று ஏற்கனவே ரிசர்வ் வங்கி அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று முதல் ATM பரிவர்த்தனை கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதாவது ஏற்கனவே ஐந்து முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.20 பிடித்தம் செய்யப்பட்டு வந்தது.
தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ள கட்டணத்தின் படி ஐந்து முறைக்கு மேல் ATM-மில் பணம் எடுத்தால் ரூ.21 கட்டணம் பிடிக்கப்படும். அதேபோல் பிற வங்கி ஏ.டி.எம்கள் பயன்பாட்டைப் பொறுத்தவரைப் பெருநகரங்களில் 3 பரிவர்த்தனைகளையும், சிறு நகரங்களில் 5 பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ளலாம். மாற்றியமைக்கப்பட்ட இந்த நடைமுறை புத்தாண்டான இன்றிலிருந்தே அமலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ராணிப்பேட்டை - 72,880 நபர்களுக்கு ரூ.296 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை எதிர்க்க பழனிசாமி பயப்படுகிறார்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
35 மீனவர்கள் கைது : ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
தருமபுரி - ரூ.39.14 கோடியில் புதிய பேருந்து நிலையம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு!
-
"மோடி நாட்டின் பிரதமர் என்பதை மறந்து பழைய குஜராத் கலவரக் காலத்திலேயே இருக்கிறார்" - முரசொலி விமர்சனம் !