India
ஆன்லைன் டிரேடிங்கில் ரூ.30 லட்சம் நஷ்டம்.. மனைவி நகைகளை அடகுவைத்த கணவன் எடுத்த விபரீத முடிவு!
புதுச்சேரியை அடுத்த குமாரபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார். இவருக்கு சந்திரலேகா என்ற பெண்ணுடன் ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
பின்னர் அய்யனார் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். கொரோனா காலத்தில் இவரது வேலை பறிபோனதால் சொந்த ஊருக்கு திரும்பினார். இதையடுத்து வேலை எதுவும் கிடைக்காமல் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஆன்லைன் டிரேடிங் செய்தால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என இவரின் நண்பர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். இதனால் அய்யனார் மனைவியின் நகைகளை அடகுவைத்து ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்துள்ளார்.
ஆனால், டிரேடிங்கில் வருமானம் கிடைக்காததுடன் கடும் நஷ்டமும் ஏற்பட்டுள்ளது. மேலும் மனைவியின் நகைகளை மீண்டும் அடகு வைத்துள்ளார். அப்போதும் அவருக்கு லாபம் கிடைக்கவில்லை. 30 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் கணவரிடம் சண்டை போட்டுவிட்டு அவரது மனைவி தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த அய்யனார் கடந்த 24ஆம் தேதி எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!