India
பால் வேனில் வைத்து மதுபானம் கடத்தல்; போலிஸை கண்டதும் ஓட்டம் பிடித்த கடத்தல்காரர்கள் - சித்தூரில் பரபரப்பு
கர்நாடகாவில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து ஆந்திராவில் விற்பதாக இருந்த திட்டத்தை சித்தூர் போலிஸார் முறியடித்துள்ளனர்.
இது தொடர்பாக வந்த தகவலை அடுத்து சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று (டிச.,28) மாவட்ட தாலுகா போலிஸார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அவ்வழியே வந்த பால் வேனை மடக்கிய போது வேனில் இருந்தவர்கள் தப்பி ஓடியதால் சந்தேகமடந்த போலிஸார் வாகனத்தை சோதித்து பார்த்ததில் ஆயிரக் கணக்கில் மதுபாட்டில்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.
இதனையடுத்து அவை அனைத்தையும் பறிமுதல் செய்த போலிஸார் வேனில் வந்த இருவரை கைது செய்து விசாரணையில் ஈடுபட்டிருக்கிறார்கள். அப்போது, அவர்கள் கார்த்திக், சுரேஷ் என்பது தெரிய வந்திருக்கிறது.
மேலும், கைப்பற்றப்பட்ட மதுபாட்டில்களின் எண்ணிக்கை 10,000 என்றும், அவற்றின் மதிப்பு 20 லட்சம் ரூபாய் என்றும் போலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!