India
ஏழை பெற்றோர்தான் டார்கெட்.. பிறந்த குழந்தைகளை விற்கும் மோசடி கும்பல் : போலிஸ் விசாரணையில் பகீர் தகவல்!
டெல்லியில் குழந்தைகள் அதிக அளவில் விற்கப்படுவதாக போலிஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலிஸார் டெல்லி காந்தி நகர் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது மூன்று பெண்கள் பிறந்த ஒரு மாதமேயான ஆண் குழந்தையை விற்பனை செய்ய முயன்றவர். இவர்களை போலிஸார் சுற்றிவளைத்து கைது செய்தனர். இதேபோன்ற மற்றொரு இடத்தில் குழந்தைகளை விற்க முயன்ற மூன்று பெண்களை போலிஸார் கைது செய்தவர்.
பின்னர் கைது செய்யப்பட்ட ஆறு பேரிடமும் போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் ஏழை பெற்றோர்களைக் குறிவைத்து, அவர்களின் குழந்தைகளைப் பணக்காரர்களுக்கு விற்று வந்தது விசாரணையில் தெரிந்தது. இதற்காக இவர்கள் ரூ. 2 லட்சத்திலிருந்து 4 லட்சம் வரை பணம் பெற்றதும் தெரியவந்தது.
மேலும் இவர்கள் யார் யாரிடம் குழந்தைகளை வாங்கி விற்பனை செய்துள்ளனர் என்பது குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
சிறுநீரக முறைகேடு - பாரபட்சமின்றி அரசு நடவடிக்கை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
-
“கடன் சுமையை பற்றி பேச அதிமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை” : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்!
-
ரூ.18.1 கோடியில் பல்நோக்கு விளையாட்டரங்கங்கள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
-
“என் பள்ளி! என் பெருமை!” போட்டிகள்! : வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கிய அமைச்சர்கள்!
-
ஃபாக்ஸ்கான் முதலீடு : சட்டபேரவையில் விளக்கிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!