India
ஏழை பெற்றோர்தான் டார்கெட்.. பிறந்த குழந்தைகளை விற்கும் மோசடி கும்பல் : போலிஸ் விசாரணையில் பகீர் தகவல்!
டெல்லியில் குழந்தைகள் அதிக அளவில் விற்கப்படுவதாக போலிஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலிஸார் டெல்லி காந்தி நகர் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது மூன்று பெண்கள் பிறந்த ஒரு மாதமேயான ஆண் குழந்தையை விற்பனை செய்ய முயன்றவர். இவர்களை போலிஸார் சுற்றிவளைத்து கைது செய்தனர். இதேபோன்ற மற்றொரு இடத்தில் குழந்தைகளை விற்க முயன்ற மூன்று பெண்களை போலிஸார் கைது செய்தவர்.
பின்னர் கைது செய்யப்பட்ட ஆறு பேரிடமும் போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் ஏழை பெற்றோர்களைக் குறிவைத்து, அவர்களின் குழந்தைகளைப் பணக்காரர்களுக்கு விற்று வந்தது விசாரணையில் தெரிந்தது. இதற்காக இவர்கள் ரூ. 2 லட்சத்திலிருந்து 4 லட்சம் வரை பணம் பெற்றதும் தெரியவந்தது.
மேலும் இவர்கள் யார் யாரிடம் குழந்தைகளை வாங்கி விற்பனை செய்துள்ளனர் என்பது குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!