India
“இந்தியாவை இந்து நாடாக மாற்ற யாரையும் கொல்வோம்” - பா.ஜ.க தலைவர்கள் முன்பு சாமியார்கள் சர்ச்சைப் பேச்சு!
ஒன்றிய பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்தே சிறுபான்மையினர் மீதான வெறுப்பு அரசியல் அதிகரித்துள்ளது. மேலும் 'இந்தியா இந்துக்களின் நாடு' என்ற பிரச்சாரத்தையும் பா.ஜ.க உட்பட அதன் ஆதரவு அமைப்புகள் தொடர்ச்சியாக செய்து வருகிறது.
இந்நிலையில், பா.ஜ.க தலைவர்களின் முன்னிலையிலேயே இந்தியா இந்துக்களின் நாடாக மாற்றுவதற்கு யாரையும் கொலை செய்வோம் என சாமியார்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்ட மாநிலம், ஹரித்வாரில் தர்ம சன்சத் என்ற இந்து அமைப்பு கடந்த 17ம் தேதியிலிருந்து 19ம் தேதி வரை மூன்றுநாட்கள் மாநாடு ஒன்றை நடத்தியுள்ளது. இந்த மாநாட்டில் உத்தரப் பிரதேச அமைச்சர் ராஜேஷ், பா.ஜ.க தலைவர் அஸ்வினி உபாத்யாயா உட்பட பல பா.ஜ.க தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த மாட்டில் கலந்து கொண்டவர்கள் இறுதிநாளில், "இந்தியாவை இந்துக்களின் நாடாக மாற்றுவோம். இதற்காகக் கொலையும் செய்வோம்" என உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ளனர். இவர்களின் இந்த உறுதிமொழி தற்போது இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, இந்தியாவில் வெறுப்பைத் தூண்டும் வகையில் மாநாடு நடத்திய தர்ம சன்சத் என்ற இந்து அமைப்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
Also Read
-
முதலீடுகள் குறித்த திமுக மீதான விமர்சனம்.. - பொய்யை உடைத்து கீர்த்தனாவுக்கு TRB ராஜா கொடுத்த பதிலடி என்ன?
-
“முதலமைச்சர் கேட்கிறார்... சபாநாயகரும் ‘ஆ... Action’ என்கிறார்!” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!
-
“ரீல்ஸ் ரெடி.. சட்டமன்றத்தை ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றிவிட்டார் முதல்வர்” : உதயநிதி ஸ்டாலின் அதிரடி பேட்டி!
-
“குட்டிக்கதையா.. கணவனை தேடும் மனைவி கதை தமிழ்நாட்டுக்கே தெரியும்!” - உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு!
-
”தொடருவாரா ஸ்டீபன் ஃப்ளெமிங்.. முடிவெடுத்த CSK.. தோனி சொன்னது இதுதான்” - முழு விவரம் உள்ளே!