India
“என்னது ‘gang war’ சண்டையா? - 80 நாய்களைக் கொன்ற குரங்கு கூட்டம்” : பகீர் சம்பவம்.. நடந்தது என்ன?
மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் லவூல் என்ற கிராமத்தில் குரங்கு கூட்டம் ஒன்று தொடர்ச்சியா தெருவில் சுற்றித்திரியும் நாய்க்குட்டிகளை கொலை செய்து வந்துள்ளது. இது அந்த கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த குரங்குகளின் வெறிச்செயல் குறித்து கிராம மக்கள் வனத்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் அங்கு வந்த வனத்துறையினர் கிராம மக்கள் உதவியுடன் இரண்டு குரங்குகளைப் பிடித்துள்ளனர்.
இதுவரை இந்த குரங்குகள் 80க்கும் மேற்பட்ட நாய்க்குட்டிகளை கடித்து, மரத்தின் மேலே இருந்து கீழே வீசி கொலை செய்துள்ளதாக அக்கிராம மக்கள் கூறுகிறனர். இதற்கு காரணம் சில வாரங்களுக்கு முன்பு குரங்கு குட்டி ஒன்றை நாய்கள் கூட்டம் கடித்துக் கொலைசெய்துள்ளது.
இதற்குப் பழிவாங்கவே தொடர்ந்து நாய்களைக் குரங்குகள் கூட்டம் கொலை செய்து வந்துள்ளது என்றும் கிராம மக்கள் கூறுகின்றனர். குரங்கு கூட்டமொன்று பழிவாங்கும் நோக்கில் 80 நாய்க்குட்டிகளை கொன்றதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!