India
“என்னது ‘gang war’ சண்டையா? - 80 நாய்களைக் கொன்ற குரங்கு கூட்டம்” : பகீர் சம்பவம்.. நடந்தது என்ன?
மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் லவூல் என்ற கிராமத்தில் குரங்கு கூட்டம் ஒன்று தொடர்ச்சியா தெருவில் சுற்றித்திரியும் நாய்க்குட்டிகளை கொலை செய்து வந்துள்ளது. இது அந்த கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த குரங்குகளின் வெறிச்செயல் குறித்து கிராம மக்கள் வனத்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் அங்கு வந்த வனத்துறையினர் கிராம மக்கள் உதவியுடன் இரண்டு குரங்குகளைப் பிடித்துள்ளனர்.
இதுவரை இந்த குரங்குகள் 80க்கும் மேற்பட்ட நாய்க்குட்டிகளை கடித்து, மரத்தின் மேலே இருந்து கீழே வீசி கொலை செய்துள்ளதாக அக்கிராம மக்கள் கூறுகிறனர். இதற்கு காரணம் சில வாரங்களுக்கு முன்பு குரங்கு குட்டி ஒன்றை நாய்கள் கூட்டம் கடித்துக் கொலைசெய்துள்ளது.
இதற்குப் பழிவாங்கவே தொடர்ந்து நாய்களைக் குரங்குகள் கூட்டம் கொலை செய்து வந்துள்ளது என்றும் கிராம மக்கள் கூறுகின்றனர். குரங்கு கூட்டமொன்று பழிவாங்கும் நோக்கில் 80 நாய்க்குட்டிகளை கொன்றதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!