India
“ரயில்வே போலிஸாரை பழிவாங்க ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்” : மர்ம நபரால் கதிகலங்கிய போலிஸ் - நடந்தது என்ன?
உத்தர பிரதே மாநிலம் ஆக்ராவில் உள்ள ரயில்வே பாதுகாப்புப் படைக்கு மர்ம நபர் ஒருவர் போன்செய்து கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ரயில்வே பாதுகாப்பு படையினர் உடனே கர்நாடகா ரயில்வே போலிஸாருக்கு இந்த தகவலை தெரிவித்தனர். பின்னர் போலிஸார் கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீவிரமாக சோதனை செய்தனர். மேலும் ரயில் நிலையங்களிலும் போலிஸார் சோதனை நடத்தினர்.
மாலை வரை சோதனை செய்தும், மர்ம நபர் கூறியது போல் வெகுண்டுகள் எதுவும் போலிஸாருக்கு கிடைக்கவில்லை. ஒருவேலை இது புரளியாக இருக்கும் என நினைத்து தொலைப்பேசியில் பேசிய மர்ம நபர் குறித்து போலிஸார் விசாரணை செய்தனர்.
அப்போது, ரயிலில் புகை பிடித்தற்காகப் பயணி ஒருவருக்கு போலிஸார் அபராதம் விதித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் பழிவாங்கும் நோக்கில் ரயில்வே போலிஸாருக்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் அந்த நபரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!