India
குழந்தை அழுததால் ஆத்திரத்தில் தாய் செய்த விபரீத செயல்... கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!
கேரளா மாநிலம், கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரண்ணி. இவரது மனைவி பிளெஸ்ஸி. இந்த தம்பதிக்கு ஒரு மாதத்திற்கு முன்பு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்நிலையில், கடந்த 8ஆம் தேதி இரவு குழந்தை எவ்வித அசைவும் இன்றி இருப்பதாகத் தனது கணவரிடம் பிளெஸ்லி தெரிவித்துள்ளார். பிறகு பதறியடித்து வீட்டிற்கு வந்த ரண்ணி குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு, குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதைக்கேட்டு ரண்ணி அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து, குழந்தையின் தாய் பிளெஸ்ஸியிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார். இதனால் அவர் மீது போலிஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
இதையடுத்து அவரிடம் போலிஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். அப்போது சம்பவத்தன்று குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தது. இதனால் எரிச்சலடைந்து குழந்தையை சுவற்றில் தூக்கி எறிந்துவிட்டுத் துணி துவைக்கச் சென்றுவிட்டேன்.
பின்னர் வந்து பார்த்தபோது குழந்தை பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தது. பிறகு கணவருக்கு தொலைபேசியில் அழைத்து குழந்தை சுயநினைவு இல்லாமல் இருப்பதாகக் கூறினேன் என விசாரணையில் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்தனர். பெற்ற தாயே குழந்தையை சுவற்றில் எறிந்து கொலை செய்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
விஜய்க்கு சொந்தப் புத்தி இல்லை என்பதற்கு இதுவே சாட்சி... வெளுத்து வாங்கிய முரசொலி!
-
“திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்.. பிரம்மாண்ட விழா.. கழகத்தில் இணைந்த 5,000 மாற்றுக் கட்சியினர்”
-
“ஓய்வை அறிவித்த இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ்.. கட்டாயப் படுத்தப்பட்டாரா?” - முழு விவரம் அறிய!
-
“எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்.. உடன்பிறப்புக்களே தயாராகுங்கள்” - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தவெக அமைச்சர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய சபரீசன்... 15 நாட்கள் மட்டுமே கெடு... விவரம் உள்ளே!