India
குழந்தை அழுததால் ஆத்திரத்தில் தாய் செய்த விபரீத செயல்... கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!
கேரளா மாநிலம், கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரண்ணி. இவரது மனைவி பிளெஸ்ஸி. இந்த தம்பதிக்கு ஒரு மாதத்திற்கு முன்பு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்நிலையில், கடந்த 8ஆம் தேதி இரவு குழந்தை எவ்வித அசைவும் இன்றி இருப்பதாகத் தனது கணவரிடம் பிளெஸ்லி தெரிவித்துள்ளார். பிறகு பதறியடித்து வீட்டிற்கு வந்த ரண்ணி குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு, குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதைக்கேட்டு ரண்ணி அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து, குழந்தையின் தாய் பிளெஸ்ஸியிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார். இதனால் அவர் மீது போலிஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
இதையடுத்து அவரிடம் போலிஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். அப்போது சம்பவத்தன்று குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தது. இதனால் எரிச்சலடைந்து குழந்தையை சுவற்றில் தூக்கி எறிந்துவிட்டுத் துணி துவைக்கச் சென்றுவிட்டேன்.
பின்னர் வந்து பார்த்தபோது குழந்தை பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தது. பிறகு கணவருக்கு தொலைபேசியில் அழைத்து குழந்தை சுயநினைவு இல்லாமல் இருப்பதாகக் கூறினேன் என விசாரணையில் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்தனர். பெற்ற தாயே குழந்தையை சுவற்றில் எறிந்து கொலை செய்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
பெண்களை தொடர்ந்து அசிங்கப்படுத்தும் அதிமுக MP சி.வி.சண்முகம் : கொதித்தெழும் திமுக MP-க்கள் - விவரம்
-
“தமிழுக்காக ஒன்றிய அரசு செலவு செய்த தொகை எவ்வளவு?” - தயாநிதி மாறன் எம்.பி. சரமாரி கேள்வி!
-
“முதலமைச்சர் செல்லும் இடமெல்லாம் மக்கள் வெள்ளத்தில் நீந்திச் செல்கிறார்!” : முரசொலி தலையங்கம்!
-
முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற வருண், வாஷிங்டன் சுந்தர்… கையில் கொடுத்த ஆச்சரியப் பரிசு: முழு விவரம்!
-
மீண்டும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைய ஓய்வறியாமல் உழைப்போம்: செல்வப்பெருந்தகை அழைப்பு!