India
சத்தமாகப் பாடல் கேட்டவருக்கு நேர்ந்த கொடூரம்.. பக்கத்து வீட்டுக்காரரின் வெறிச்செயல்: நடந்தது என்ன?
மும்பை நகரத்தில் உள்ள மல்வானி பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்திர குமார் குன்னார். இவர் கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி தனது வீட்டில் அதிக சத்தத்துடன் பாட்டு கேட்டு கொண்டிருந்திருக்கிறார்.
அப்போது, பக்கத்து வீட்டைச் சேர்ந்த சஃயீப் அலி, குன்னார் வீட்டிற்கு வந்து சத்தத்தைக் குறைத்து வைத்துப் பாட்டு கேட்கும்படி கூறியிருக்கிறார். ஆனால் குன்னார் இதற்கு மறுப்பு தெரிவித்து நான் அப்படித்தான் பாடல் கேட்பேன் என கூறி அதிக சத்தத்துடன் பாட்டுக் கேட்டிருக்கிறார்.
இதனால், ஆத்திரமடைந்த சஃயீப் அலி, குன்னாரை பலமாகத் தாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அறிந்த போலிஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த சஃயீப் அலியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!