India
2வது டோஸ் தடுப்பூசி போட்டால் SMART PHONE: நகராட்சியின் அதிரடி ஆஃபர்!
இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க நாடுமுழுவதும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவில் 125 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலானவர்கள் முதல் தவணை தடுப்பூசி மட்டுமே செலுத்தியுள்ளனர். இரண்டாவது தவணை செலுத்து கொண்டவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது.
இதையடுத்து நாடு முழுவதும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்துவதற்கான பணிகளை மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்கப்படும் என்ற திட்டத்தை ராஜ்கோட் நகராட்சி அறிவித்துள்ளது.
குஜராத் மாநிலம், ராஜ்கோட் நகராட்சியில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்களைக் கவரும் விதமாக, டிசம்பர் 4ம் தேதியிலிருந்து 10ம் தேதி வரை கொரோனா இரண்டாவது தவணை செலுத்திக் கொள்பவர்களுக்குக் குலுக்கல் போட்டி நடைபெறும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் பதிப்பிலான ஸ்மார்ட் போன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“ஆளுநரின் இந்த துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காராணம்” : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“குதிரை பேரத்தில் No 1 குற்றவாளி விஜய் தான்” : கழக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் குற்றச்சாட்டு!
-
தவெக ஆட்சியில் ‘அரசு வழக்கறிஞர்’ பதவிக்கு ரூ.30 லட்சம் வரை லஞ்சம்! : திமுக தகவல் தொழில்நுட்ப அணி கண்டனம்!
-
“த.வெ.க வாஷிங் மெஷினில் புனிதர்களாகும் ஊழல் வாதிகள்” : முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு!
-
லஞ்சம் பெற்று அரசு வழக்கறிஞர் நியமனம்... தவெக அரசுக்கு எதிராக வழக்கு போட்ட தவெக வழக்கறிஞர் - விவரம்!