India
பொதுமக்கள் 13 பேரை சுட்டுக்கொலை செய்த ராணுவம்: நாகாலாந்து கொடூர சம்பவத்தின் பின்னணி என்ன?
வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் உள்ளது மோன் மாவட்டம். இந்த மாவட்டத்திற்குட்பட்ட திரு என்ற கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், அங்குள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றி விட்டு நேற்று வேன் ஒன்றில் வீட்டிற்குச் சென்று கெண்டிருந்தனர்.
அப்போது ராணுவ வீரர்கள் தொழிலாளர்களைப் பயங்கரவாதிகள் என நினைத்து அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், இதில் 13 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த கிராம மக்கள் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் பொதுமக்களுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. மேலும் ஆத்திரத்தில் பொதுமக்கள் ராணுவ வீரர்களின் வாகனங்களை தீவைத்து கொளுத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தை அடுத்து மோன் மாவட்டத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, "உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து, ராணுவ வீரர்களின் துப்பாக்கிச்சூடு தொடர்பாகச் சிறப்பு விசாரணைக்குழு அமைத்து விரிவான விசாரணை நடத்தப்படும்" என தெரிவித்துள்ளார்.
"ராணுவ வீரர்களின் துப்பாக்கிச்சூடு தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், மக்கள் அமைதிக்காக்க வேண்டும்" என நாகாலாந்து முதல்வர் நைபியு ரியோ தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தை அடுத்து மோன் மாவட்டத்தில் இணையச் சேவைகள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. பதற்றமான சூழல் உள்ளதால் இணையச் சேவை முடக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
பீகார் SIR : பா.ஜ.க.வை வெற்றி பெற வைக்கும் அமைப்பாக தேர்தல் ஆணையம் மாறிவிட்டது - முரசொலி விமர்சனம் !
-
ரூ.110.92 கோடியில் துணைமின் நிலையம் : கொளத்தூரில் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.2000 கோடி முதலீடு - 3000 பேருக்கு வேலை : Hitachi நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவர்களது நோக்கம்” : சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“ஒன்றிய அரசின் மனிதத்தன்மையற்ற செயல்” : புதிய EPFO விதிகளுக்கு கனிமொழி MP எதிர்ப்பு!