India
இந்தியாவில் ஒமைக்ரான் பரவலா? வெளிநாட்டிலிருந்து வந்தவர்களுக்கு கொரோனா பாசிடிவ்; வெளியான அதிர்ச்சி தகவல்!
ஒமைக்ரான் பாதித்த நாடுகளிலிருந்து வந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து டெல்லியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஒமைக்ரான் சோதனை முடிவுகளுக்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து, பெல்ஜியம், தென் ஆப்ரிக்கா நாடுகளிலிருந்து டெல்லி வந்த 6 பேருக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து டெல்லி லோக்நாயக் மருத்துவக் கல்லூரியில் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகள் ஒமைக்ரான் சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இவர்களுக்கு சிகிச்சை வழங்க தனி மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது.
நேற்று மட்டும் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் 3476 சர்வதேச பயணிகளிடம் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது.
இதனிடையே, இன்று மாலை கொரோனா மேலாண்மை குழு நீண்ட இடைவேளைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து நிலமையை விளக்க உள்ளனர்.
Also Read
-
ச்சீ... பெண்களை இழிவு செய்யும் அதிமுக நிர்வாகிகள்.. வேடிக்கை பார்க்கும் அதிமுக - பாஜக பெண் உறுப்பினர்கள்!
-
கிரிக்கெட்டின் சாம்ராஜ்ஜியம் 7ம் நம்பருக்கு ஓய்வு…தோனியின் சமூக வலைதளப் பதிவு வைரல்? - முழு விவரம் உள்ளே!
-
திமுக கூட்டணியில் விறுவிறுப்பாக நடைபெறும் தொகுதி பங்கீடு.. -6 கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எத்தனை?
-
வாக்காளர்களே... வாக்களிக்கும்போது அடையாள அட்டை கட்டாயம்.. என்னென்ன ஆவணங்கள் தேவை? - விவரம்!
-
“பாஜகவை வீழ்த்துவதுதான் முதல் குறிக்கோள்!” : திமுக - CPI இடையே முடிந்த தொகுதி உடன்பாடு - விவரம் உள்ளே!