India
இந்தியாவில் ஒமைக்ரான் பரவலா? வெளிநாட்டிலிருந்து வந்தவர்களுக்கு கொரோனா பாசிடிவ்; வெளியான அதிர்ச்சி தகவல்!
ஒமைக்ரான் பாதித்த நாடுகளிலிருந்து வந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து டெல்லியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஒமைக்ரான் சோதனை முடிவுகளுக்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து, பெல்ஜியம், தென் ஆப்ரிக்கா நாடுகளிலிருந்து டெல்லி வந்த 6 பேருக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து டெல்லி லோக்நாயக் மருத்துவக் கல்லூரியில் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகள் ஒமைக்ரான் சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இவர்களுக்கு சிகிச்சை வழங்க தனி மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது.
நேற்று மட்டும் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் 3476 சர்வதேச பயணிகளிடம் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது.
இதனிடையே, இன்று மாலை கொரோனா மேலாண்மை குழு நீண்ட இடைவேளைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து நிலமையை விளக்க உள்ளனர்.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!