India
பரப்பன அக்ரஹார சிறையில் கொடி கட்டி பறக்கும் கஞ்சா விற்பனை; அதிரடி ரெய்டு நடத்திய க்ரைம் போலிஸார்!
கர்நாடக மாநிலம் பரப்பன அக்ரஹாரத்தில் உள்ள மத்திய சிறைச்சாலையில் உள்ள அறைகளில் குற்றப்பிரிவு போலிஸார் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டு கஞ்சா மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பரப்பன அக்ரஹாரா சிறை சாலையில் கடந்த சில நாட்களாக கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வருவதாக குற்றப்பிரிவு போலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் 25க்கும் மேற்பட்ட குற்றப்பிரிவு போலிஸார் அங்கு சென்று திடீரென ஆய்வு செய்தனர். அப்போது 20க்கும் மேற்பட்ட பிரபல ரவுடிகளின் அறைகளில் கஞ்சா மற்றும் செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் மத்திய சிறைச்சாலையில் கஞ்சா விற்பனையாளர்களை கண்டுபிடிக்கப்பட்டு அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து அந்த சிறைச்சாலையில் குற்றப்பிரிவு போலிஸார் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் போலிஸார்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
“சீரழியும் சிறைத்துறை... கண்டுகொள்ளாத நிர்மல்குமார்!” : தி.மு.க இளைஞர் அணி கண்டனம்!
-
“சபரி வர்மன் காவல் மரணம்.. கொடூரமான துறையாக முதல்வர் விஜயின் உள்துறை உள்ளது” : கீதா ஜீவன் காட்டம்!
-
போட்டோவுக்கு யார் போஸ் கொடுப்பது.. காமராஜர் பிறந்தநாள் விழாவில் மோதிக்கொண்ட காங்கிரஸ் நிர்வாகிகள்!
-
கல்விக்கண் திறந்த கர்மவீரரின் புகழ் என்றும் நிலைத்திருக்கும் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் புகழ்வணக்கம்!
-
த.வெ.க அரசின் மாற்றம் இதுதானா? : லாக்கப் படுகொலைக்கு பிரேமலதா விஜயகாந்த் எம்.எல்.ஏ கண்டனம்!