India
பரப்பன அக்ரஹார சிறையில் கொடி கட்டி பறக்கும் கஞ்சா விற்பனை; அதிரடி ரெய்டு நடத்திய க்ரைம் போலிஸார்!
கர்நாடக மாநிலம் பரப்பன அக்ரஹாரத்தில் உள்ள மத்திய சிறைச்சாலையில் உள்ள அறைகளில் குற்றப்பிரிவு போலிஸார் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டு கஞ்சா மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பரப்பன அக்ரஹாரா சிறை சாலையில் கடந்த சில நாட்களாக கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வருவதாக குற்றப்பிரிவு போலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் 25க்கும் மேற்பட்ட குற்றப்பிரிவு போலிஸார் அங்கு சென்று திடீரென ஆய்வு செய்தனர். அப்போது 20க்கும் மேற்பட்ட பிரபல ரவுடிகளின் அறைகளில் கஞ்சா மற்றும் செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் மத்திய சிறைச்சாலையில் கஞ்சா விற்பனையாளர்களை கண்டுபிடிக்கப்பட்டு அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து அந்த சிறைச்சாலையில் குற்றப்பிரிவு போலிஸார் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் போலிஸார்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!
-
தேசிய நெடுஞ்சாலைகளில் மின்சார வாகன (EV) சார்ஜிங் நிலையங்கள் : திமுக MP ராஜேஷ்குமார் வலியுறுத்தல்!
-
”அனல் மின் நிலையங்களுக்கு உரிய நிலக்கரி ஒதுக்கீடு வேண்டும்” : தமிழச்சி தங்கபாண்டியன் MP வலியுறுத்தல்!
-
“அரசமைப்பு திருத்தம் என்பது சீர்திருத்தம் அல்ல; சர்வாதிகாரத்தின் தொடக்கம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”கிராமங்களுக்கு அதிவேக இணைய வசதி” : நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி அ.மணி கோரிக்கை!