India
வெடிகுண்டாக மாறிய ஐஸ்கிரீம் பந்து.. வெடித்ததில் சிறுவன் காயம்: கேரளாவில் நடந்த அதிர்ச்சிகர சம்பவம்!
கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்திற்குட்பட்ட நரிவயல் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீவர்த் பிரதீப். சிறுவனான பிரதீப் நேற்று தனது வீட்டின் அருகே நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது சிறுவன் ஒருவன் அடித்ததில் பந்து அருகே இருந்த வீட்டிற்குள் விழுந்தது. இதனால் பந்தை எடுப்பதற்காகச் சிறுவன் பிரதீப் அங்குச் சென்றுள்ளார். அப்போது மூன்று ஐஸ்கிரீம் பந்துகள் இருந்துள்ளது.
இதைப்பார்த்த பிரதீப், அதில் ஒன்றை எடுத்துத் திறந்துள்ளார். அப்போது அந்த ஐஸ்கிரிம் பந்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது. இதில் சிறுவனுக்குப் பலத்தக் காயம் ஏற்பட்டது.
பிறகு அருகே இருந்தவர்கள் சிறுவனை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது பற்றி தகவல் அறிந்த போலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து வெடித்து சிதறியிருந்த ஐஸ்கிரீம் பந்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். ஐஸ்கிரீம் பந்து வெடிகுண்டாக மாறிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ஐஸ்கிரீம் பந்தில் வெடிகுண்டு வெடித்த சம்பவம் இது முதல்முறை அல்ல. முன்னதாக கண்ணூர் பகுதியிலும் இதுபோன்று ஒரு சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!