India
தனது 3 குழந்தைகளையும் கொடூரமாக எரித்துக்கொன்ற தந்தை - தூக்கு தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
உத்தர பிரதேச மாநிலம், லலித்பூர் மாவட்டத்திற்குட்பட்ட வீர் கிராமத்தைச் சேர்ந்தவர் சித்து. இவர் கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் 13ம் தேதி இரவு குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் தூக்கிக் கொண்டிருந்த தனது மூன்று குழந்தைகளான அஞ்சனி, ரட்டோ, புட்டோ ஆகியோரை இரும்பு கம்பியால் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.
பின்னர் வீட்டின் சமையல் அறையிலிருந்து சிலிண்டரை திறந்து விட்டுவிட்டு வெளியே வந்து வீட்டிற்குத் தீவைத்துள்ளார். இதைப் பார்த்து அருகே இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனால் மூன்று குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதையடுத்து குழந்தைகளை எறித்து கொலை செய்த தத்தை சித்துவை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு லலித்பூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கை விசாரணை நடத்தி வந்த நீதிபதிகள் இறுதித் தீர்ப்பு வழங்கினர். குழந்தைகளை எறித்து கொலை செய்த சித்துவுக்கு தூக்குத் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி நிர்பய் பிரகாஷ் உத்தரவிட்டார்.
Also Read
-
விதிமீறல்களுக்கு பெயர்போன பா.ஜ.க! : நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையம்!
-
பாகிஸ்தான் உதவியை நாடும் பா.ஜ.க! : தேர்தல் விதிமுறைகளை தகர்க்கும் மோடி அரசு!
-
குற்றவாளிகளுக்கு தரப்படும் ஜாமீன், முதல்வர்களுக்கு மறுக்கப்படுகிறது : பா.ஜ.க.வின் அடக்குமுறை அரசியல்!
-
”திராவிட மாடல் ஆட்சியில் மக்கள் மனங்களில் தாண்டவமாடும் மகிழ்ச்சி” : கி.வீரமணி வாழ்த்து!
-
”அரசியல் சாசனம் இல்லாமல் நாட்டை ஆட்சி செய்ய நினைக்கும் மோடி” : ராகுல் காந்தி தாக்கு!