India
வழுக்கை தலையை மறைத்து இளம் பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை - நகை பறிப்பு: தெலங்கானாவில் அதிர்ச்சி !
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள கே.பி.எஸ்.சி காலனி பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு இன்ஸ்ட்டாகிராம் மூலம் கார்த்திக் வர்மா என்பவர் அறிமுகமாகியுள்ளார்.
இதையடுத்து இருவரும் நெருக்கமாகப் பழகிவந்துள்ளனர். இதைப் பயன்படுத்திக் கொண்டு கார்த்திக் அந்த பெண்ணிடமிருந்து 18 சவரன் தங்க நகைகள், ரூ.70 ஆயிரம் வரை பணம் வாங்கியுள்ளார்.
பின்னர், கார்த்திக் மீது சந்தேகம் அடைந்த அந்தப் பெண் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இது குறித்து போலிஸார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பெண்ணிடம் ஆந்திரா மாநிலம், ஹம்சவரம் கிராமத்தைச் சேர்ந்த சேக் முகமது ரபி என்ற இளைஞர்தான் Instagram பக்கத்தில் தனது பெயரி கார்த்திக் வர்மா என போலியா கணக்கைத் தொடங்கியுள்ளார்.
இந்த கணக்கிலிருந்து வசதி படைத்த இளம் பெண்களைக் குறிவைத்துத் தான் வெளிநாட்டில் வேலை பார்த்து இந்தியா திரும்பியுள்ளதாகக் கூறியுள்ளார். மேலும் அவருக்கு வழுக்கைத் தலை உள்ளது.
ஆனால், இதை விக்வைத்து மறைத்துக்கொண்டு செல்போன்களில் போட்டோடு எடுத்து அதை இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி வந்துள்ளார். இதைப்பார்த்து அவருடன் நெருங்கிய பெண்களைக் குறித்து பணம், நகைகளைப் பறித்து வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து முகமது ரபி எந்த எந்த பெண்களிடம் நகை, பணம் பறித்து ஏமாற்றியுள்ளார் என்பது குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி - பதில் சொல்லாத மோடி : முரசொலி!
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!