India
மக்களே உஷார்.. தொலைந்த செல்போனால் ரூ.50 ஆயிரத்தை இழந்த இளைஞர் : அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன?
டெல்லியைச் சேர்ந்தவர் சந்தீப் ஷர்மா. இவரது செல்போன் நவம்பர் 3ம் தேதி காணாமல் போனதாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். பின்னர் நவம்பர் 5ம் தேதி புதிய செல்போன் ஒன்றை வாங்கியுள்ளார். இதில் சிம்கார்டை ஆக்டிவேட் செய்துள்ளார்.
அப்போது, அவரது PhonePe செயலியிலிருந்து ரூ.52,860 எடுக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பிறகு இது குறித்து புராவரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து PhonePe செயலியிலிருந்த வங்கிக் கணக்கு விவரங்களை எடுத்து விசாரணை நடத்தினர். இதில் சஞ்சய் மற்றும் ராகுல்தாஸ் என்பவர்கள்தான் பணத்தை நூதனமா திருடியது தெரியவந்தது.
பின்னர் இருவரையும் போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் இவர்களின் நூதன திருட்டி அம்பலமானது. சந்தீபின் காணாமல்போன செல்போனை ராகுலிடம் சிக்கியுள்ளது. இதையடுத்து அந்த செல்போனை அன்லாக் செய்து, PhonePe செயலியை நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அதன் பாஸ்வேர்டுகளை தெரிந்து கொண்டு, அதிலிருந்து சஞ்சய்க்குப் பணம் அனுப்பியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து சந்தீப்பிடமிருந்து திருடிய பணத்தில் வாங்கிய 20,000 மதிப்புள்ள புதிய போன் ஒன்றை ராகுலிடமிருந்து பறிமுதல் போலிஸார் பறிமுதல் செய்தனர்.
Also Read
-
ஆந்திராவில் ரூ.2000 கோடி பணத்துடன் சிக்கிய கண்டெய்னர்கள்: இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி - விவரம் என்ன ?
-
போதை பொருள்வழக்கு : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உறவினர் வீட்டில் அதிரடி சோதனை !
-
ஹரியானாவில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு தொடரும் எதிர்ப்பு : துரத்தியடித்த பொதுமக்கள் !
-
பேட்டிங்கில் சொதப்பிய CSK : பஞ்சாப் அணி அபார வெற்றி... சென்னையில் பிளே ஆஃப் வாய்ப்புக்கு சிக்கல் !
-
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து விவாதிக்க தயாரா? : மோடிக்கு மீண்டும் மல்லிகார்ஜூன கார்கே கடிதம்!