India
எதிர்ப்பை மீறி ₹1,171 கோடி ஒப்பந்தம் விறுவிறு; ’இந்தியா ஹவுஸ்’ கட்ட மோடி அரசு மும்முரம்!
டெல்லியில் புதிய நாடாளுமன்றம், புதிய பிரதமர் இல்லம், அரசு அலுவலகங்கள் சுமார் 20 ஆயிரம் கோடி செலவில் கட்டப்பட்டு வருகின்றன.
பொருளாதார நெருக்கடியில் தற்போது இவை தேவைதானா என்ற கேள்வியை எதிர்கட்சிகள் எழுப்பின. அதனை கண்டு கொள்ளாமல் திட்டப்பணிகளை ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து வருகிறது.
இதனிடையே தற்போது பிரதமருக்கு புதிய அலுவலகம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. நான்கு மாடிகள் கொண்ட இந்த கட்டடத்தில் பிரதமருக்கான அலுலகம், அமைச்சரவை செயலாளர் அலுவலகம், தேசிய பாதுகாப்பு அலுவலகங்கள் இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த கட்டடத்தின் இரண்டு மாடிகளை வெளிநாட்டு தலைவர்களை சந்திப்பதற்கான சிறப்பு அலுவமாக வடிவமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு இந்தியா இல்லம் என்ற பெயரை வைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.
பல ஆண்டுகளாக இந்தியா கேட் அருகே உள்ள ஹைதராபாத் மாளிகையில்தான் வெளிநாட்டு தலைவர்களை பிரதமர் சந்தித்து ஆலோசனை நடத்துவது வழக்கமாக இருந்து வருகிறது.
இதனை இந்த புதிய கட்டடத்துக்கு மாற்றும் வகையில் திட்டமிடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த கட்டடத்துக்கான முன் ஒப்பந்தப்புள்ளி தற்போது கோரப்பட்டுள்ளது.
Also Read
-
“ஒன்றிய விளையாட்டுத் துறையில் 21% நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
ரூ.718 கோடி முதலீட்டில் 663 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“ஏழை மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடியது VB-G RAM G முன் வடிவு!” : பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
“சுய உதவிக்குழுக்களின் தயாரிப்பு பொருட்கள், இதுவரை சுமார் ரூ.690 கோடிக்கு விற்பனை!” : துணை முதலமைச்சர்!
-
“பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் திராவிட மாடல் அரசு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி உரை!