India
உருட்டுக் கட்டையால் போலிஸை தாக்கிய போதை ஆசாமி.. பதிலுக்கு காவலர் செய்தது என்ன? - சத்தீஸ்கரில் அதிர்ச்சி!
சத்தீஸ்கர் மாநிலம், சிட்டி கோட்வாலி பகுதியில் வெள்ளியன்று போக்குவரத்து காவலர் மஞ்சேஷ் சிங் என்பவர் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அனிஷ்கான் என்ற இளைஞர், கையில் தடியுடன் சாலையில் சுற்றிக்கொண்டிருந்தார். இதைப் பார்த்த காவலர், இளைஞரை ஓரமாக நடந்து செல்லுமாறு கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அனிஷ்கான், காவலர் மஞ்சேஷ் சிங்கை தடியால் கொடூரமாக தாக்கியுள்ளார். போலிஸாரை தாக்கியதில் அந்த தடியே இரண்டாக உடைந்தது. அந்த இளைஞர் குடிபோதையில் இருந்ததால் காவலர் அவரை எதிர்த்துத் தாக்கவில்லை. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து அந்த இளைஞர் மீது போக்குவரத்து காவலர் மஞ்சேஷ் சிங் புகார் கொடுத்தார். அவரது புகாரின் அடிப்படையில் போலிஸார் இளைஞர் அனிஷ்கானை கைது செய்து சிறையில் அடைத்தனர். தன்னை தாக்கியபோதும், எதிர்த்துத் தாக்காமல் அமைதி காத்த காவலர் மஞ்சேஷ் சிங்கிற்கு காவல்துறை அதிகாரிகள் வெகுமதி அளித்துப் பாராட்டியுள்ளனர்.
Also Read
-
"அரசியல் செய்யும் மதுரை ஆதீனம், மட விவகாரங்களில் இருந்து விலக வேண்டும்" - இளைய ஆதினம் புகார் !
-
ரூ.3,201 கோடி முதலீட்டில் 6,250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் MoU!
-
சென்னையில் நாளை 13 இடங்களில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் : இடங்கள் குறித்த விவரம் உள்ளே !
-
”இளைஞர்களின் வெற்றியை உறுதி செய்திடுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
சென்னை மெட்ரோ ரயிலுக்கு நாளுக்கு நாள் ஆதரிக்கும் பொதுமக்களின் ஆதரவு : ஆகஸ்ட்டில் 99.09 லட்சம் பேர் பயணம்!