India
“தன்னைத்தானே சுட்டுக் கொண்ட 4 வயது சிறுவன்” : தலைமை காவலரின் மகனுக்கு நேர்ந்த அவலம் - அதிர்ச்சி சம்பவம்!
கோவா மாநிலம், பிகோலிம் நகராட்சியில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார் தசரத் வைகங்கர். இவர் நேற்று இரவி பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்
அப்போது, வீட்டின் படுக்கை அறையில் துப்பாக்கியை வைத்துவிட்டு குளியல் அறைக்குச் சென்றுள்ளார். அந்த நேரம் அவரது நான்கு வயது மகன் துப்பாக்கியை எடுத்தபோது, தவறுதலாக டிரிகரில் கைப்பட்டு குண்டு சிறுவனின் கழுத்தில் பாய்ந்துள்ளது.
பிறகு, துப்பாக்கிச் சத்தம் கேட்டு வீட்டிலிருந்தவர்கள் வந்து பார்த்தபோது சிறுவன் இரத்த வெள்ளத்தில் கீழே விழுந்துகிடந்தான். உடனே அவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காவலர் தசரத் வைகங்கர் வி.ஐ.பிகளுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதால் அவருக்கு போலிஸார் துப்பாக்கி வழங்கியுள்ளனர்.
இந்த சம்பவத்தை அடுத்து போலிஸார் வீட்டில் துப்பாக்கிகளை வைக்கும் போது பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும். குறிப்பாகச் சிறுவர்கள் அதை எடுக்காதவாறு உயரமான இடங்களில் வைக்க வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்
Also Read
-
“கைதுக்கு பயமில்லை... எதுவானாலும் நேருக்கு நேர் சந்திப்பேன்” – கெத்தாக பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின்!
-
உதயநிதி ஸ்டாலின் கைது கண்டனத்திற்குரியது.. தவெக அரசு அராஜகம் - அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!
-
“காவிரி பிரச்சினையை திசை திருப்ப... உதயநிதியை கைது செய்து அராஜகம்!” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
-
தமிழ்நாடு முழுவதும் கொந்தளிப்பு : வரம்பு மீறிய காவல்துறை... நீதிமன்றத்தில் உதயநிதி தரப்பு வாதம்!
-
வீழ்ந்த சர்வாதிகாரம்.. “உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும்”: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!