India
சேட்டை செய்த 2ஆம் வகுப்பு மாணவனை தலைகீழாக தொங்கவிட்ட தலைமை ஆசிரியர் : உ.பி-யில் கொடூர தண்டனை!
உத்தர பிரதேச மாநிலம், மிர்ஸாபூரில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சோனு என்ற மாணவர் 2ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று பள்ளியின் மதிய உணவு இடைவேளையின் போது சக மாணவர்களிடம் சோனு அதிகமாகக் குறும்பு செய்துள்ளார். இதைப் பார்த்த பள்ளி தலைமை ஆசிரியர் விஸ்வகர்மா சோனுவை பள்ளியின் முதல் மாடியில் இருந்து தலைகீழாகத் தொங்கவிட்டு அச்சுறுத்தியுள்ளார்.
இதைப்பார்த்து சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். 'இனி குறும்பு செய்ய மாட்டேன், மன்னித்து விடுங்கள்' எனச் சொன்னால்தான் விடுவேன் என தலைமை ஆசிரியர் கூறியுள்ளார். பின்னர் மாணவர் மன்னிப்பு கேட்ட பிறகே தலைமை ஆசிரியர் அம்மாணவனை விடுவித்தார்.
பள்ளி தலைமை ஆசிரியரின் இந்த கொடூர தண்டனை வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை அடுத்து மாவட்ட நீதிபதி பிரவீன் குமார் லக்ஷ்கர் பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினர். மேலும் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கல்வித்துறைக்குப் புகார் அளித்துள்ளார்.
தலைமை ஆசிரியரின் இந்த கொடூர தண்டனைக்கு கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
TVK Fails... ! ஆட்சியே அமைக்கவில்லை அதற்குள் : த.வெ.க-வினரின் மூன்று சம்பங்களால் பொதுமக்கள் அதிர்ச்சி!
-
ரவுடிபோல் வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய த.வெ.க MLA : பொதுமக்கள் அதிர்ச்சி!
-
“தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன குறை வைத்தார் திராவிட நாயகன் மு.க.ஸ்டாலின்?” : முரசொலி தலையங்கம்!
-
”கொளத்தூரின் ஒவ்வொரு தெருவிலும் நான் உருவாக்கிய திட்டங்கள்”- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
’அழக்கூடாது’... கொளத்தூர் மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த மு.க.ஸ்டாலின்!