India
"26% நீதிமன்றங்களில் கழிவறையில்லை": ஒன்றிய சட்ட அமைச்சர் முன்பே புள்ளி விவரத்தை அடுக்கிய தலைமை நீதிபதி!
இந்தியாவில் சுமார் 26% நீதிமன்றங்களில் பெண்களுக்காகத் தனி கழிப்பறை வசதி இல்லை என தலைமை நீதிபதி என்.வி.ரமணா கவலை தெரிவித்துள்ளார்.
மும்பை உயர் நீதிமன்ற அவுரங்காபாத் கிளையில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிங்கள் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்று புதிய நீதிமன்ற கட்டிடத்தை தலைமை நீதிபதி என்.வி.ரமணா திறந்துவைத்தார்.
இந்நிகழ்வில் பேசிய தலைமை நீதிபதி என்.வி.ரமணா," இந்தியாவில் உள்ள நீதிமன்ற கட்டிடங்கள் இன்னும் பாழடைந்த கட்டமைப்புகளுடன் செயல்படுகின்றன. இதனால் நீதிமன்றம் திறம்படச் செயல்படுவது கடினமாக உள்ளது.
இந்தியாவில் உள்ள நீதிமன்றங்களில் 5% நீதிமன்ற வளாகங்களில் மட்டுமே அடிப்படை மருத்துவ உதவிகள் உள்ளது. 26% நீதிமன்றங்களில் பெண்களுக்குத் தனி கழிப்பறைகள் இல்லை. 16% நீதிமன்றங்களில் ஆண்களுக்குக் கழிப்பறைகள் இல்லை.
மேலும் 50% நீதிமன்ற வளாகங்களில் நூலகம் இல்லை. 46% நீதிமன்ற வளாகங்களில் தண்ணீரைச் சுத்திகரிக்கும் வசதி இல்லை. நீதிமன்ற உள்கட்டமைப்பு குறித்து ஒன்றிய சட்டத்துறை அமைச்சருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். விரைவில் இதற்குப் பதில் வரும் என நான் எதிர்ப்பார்க்கிறேன். மேலும் நீதிமன்ற கட்டமைப்புகளை மேம்படுத்துவார்கள் என்றும் நம்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் ஒன்றிய சட்ட அமைச்சர் சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூவும் கலந்து கொண்டார். மேடையில் ஒன்றிய அமைச்சர் அமர்ந்து இருக்கும்போதே நீதிமன்ற கட்டமைப்புகள் குறித்து தலைமை நீதிபதி குற்றச்சாட்டு வைத்துப் பேசியிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
Also Read
-
பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் முதல் வீரர்களுக்கு ஊக்கத்தொகை வரை... துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அசத்தல்!
-
“2026-இல் மாபெரும் வெற்றியை நோக்கி முன்செல்கிறோம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
“கீழடி,பொருநைக்கு சென்று பார்க்கச் சொல்லுங்கள்” : தமிழிசை சௌந்தரராஜனுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
மற்றொரு நிர்பயா : பா.ஜ.க ஆளும் அரியானாவில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் - உடலில் 12 தையல்!
-
“விளையாட்டுத் துறையில் இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலம் தமிழ்நாடு!” : துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம்!