India
ஆபாச படம் பார்க்க மறுத்த 6 வயது சிறுமியை அடித்துக் கொன்ற சிறுவர்கள்: அசாமில் நடந்த பயங்கரம்!
அசாம் மாநிலம், நாகோன் மாவட்டத்திற்குட்பட்ட நிஜோரி பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமியிடம் அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் செல்போனில் ஆபாச படம் காட்டி தவறாக நடந்து கொள்ள முயன்றுள்ளனர்.
அப்போது, சிறுமி இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவிப்பதாகக் கூறி அவர்களிடமிருந்து தப்பிக்கப் பார்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவர்கள் அப்பகுதியில் உள்ள கல் உடைக்கும் தொழிற்சாலைக்கு இழுத்துச் சென்று அங்குக் கல்லால் அடித்து கொலை செய்துள்ளனர்.
பின்னர் எதுவும் நடக்காததுபோலவே, சிறுமியின் வீட்டிற்குச் சென்று கல் உடைக்கும் ஆலையில் உங்கள் மகள் மயங்கிக் கிடப்பதாகக் கூறியுள்ளனர். இதைக் கேட்டு அங்குச் சென்ற பெற்றோர் மகள் இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்து போலிஸார் சிறுமியை அடித்து கொலை இரண்டு சிறுவர்களை கைது செய்தனர். மேலும் விசாரணைக்கு ஒத்துழைக்காத ஒரு சிறுவனின் தந்தை போலிஸார் கைது செய்தனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!