India
“சாம்பார் நல்லா இல்ல” : ஆத்திரத்தில் தாய், தங்கையை சுட்டுக்கொன்ற இளைஞர் - கர்நாடகாவில் ‘பகீர்’ சம்பவம்!
சாம்பார் சரியில்லை என்ற காரணத்தால் வீட்டில் தகராறு ஏற்பட்டு தாய் மற்றும் தங்கையை இளைஞர் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் சித்தாப்புரா அருகே குடகோடு பகுதியைச் சேர்ந்த மஞ்சுநாத் (24) நேற்று இரவு குடித்துவிட்டு வந்து வீட்டில் சாப்பிட்டுள்ளார்.
அப்போது சாம்பார் ருசியாக இல்லை என்ற காரணத்தால் தகராறு ஏற்பட்டதில், தாய் மற்றும் தங்கையை தன்னிடம் இருந்த நாட்டு துப்பாக்கி எடுத்து சுட்டுள்ளார்.
இதில் சம்பவ இடத்திலேயே தாய் பார்வதி (42) மற்றும் தங்கை ரம்யா (19) ஆகியோர் உயிரிழந்தனர். வெளியில் சென்றிருந்த தந்தை வீட்டுடு வந்து மனைவியும் மகளும் கொலையுண்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
பின்னர், சித்தாப்புரா காவல் நிலைத்தில் தன் மகன் மீது புகார் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலிஸார், மஞ்சுநாத் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
மீண்டும் அதிகாரப் போட்டி... தொடரும் கோஷ்டி மோதல்கள் – அதிமுகவின் உட்கட்சி மோதல் வரலாறு!
-
“விஜய்க்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தி.மு.க தலைவர் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்! : ஆரத்தழுவி வரவேற்ற மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க.வின் 107 எம்.எல்.ஏ.க்களில் 41 பேர் மீது வழக்கு : வெளியான அதிர்ச்சி ஆய்வறிக்கை!
-
மறந்துட்டியா..?! - வெற்றி சான்றிதழை மறந்த தவெக பெண் அமைச்சர்.. பதவியேற்காமல் அனுப்பி வைக்கப்பட்ட சோகம்!