India
“சிகரெட் தர்றியா.. இல்லையா” : இளம்பெண்ணை அடித்தே கொன்ற வாலிபர்.. டெல்லியில் ‘பகீர்' சம்பவம்!
டெல்லியில் உள்ள துவாரகா பகுதியில், பெண் ஒருவர் பெட்டிக்கடை நடத்தி வந்தார். அங்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர், அந்தப் பெண்ணிடம் சிகரெட் வேண்டும் என்று கேட்டுள்ளார்.
ஆனால், அவரிடம் உரிய பணம் இல்லாததால், அந்தப் பெண் சிகரெட் தர மறுத்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால், கடும் ஆத்திரமடைந்த அந்த வாடிக்கையாளர், அப்பெண்ணை, கடுமையாகத் தாக்கியுள்ளார். மேலும், கத்தியால் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த அந்தப் பெண், பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவத்தின்போது அங்கிருந்த மக்கள் கொலையாளியை கடுமையாகத் தாக்கினர். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் கொலையாளியை கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், கொலையாளி ராஜ்புரியை சேர்ந்த திலீப் என்பது தெரியவந்துள்ளது.
- கார்த்திகேயன்
Also Read
-
முதல் நாளே 120 தொகுதிகள்... வீடு வீடாக பரப்புரை... களத்தில் இறங்கியது ஸ்டாலினின் மகளிர் படை!
-
“மாணவர் நலனில் அக்கறை இருப்பதுபோல், நீலிக்கண்ணீர் வடிக்கும் அன்புமணி” : அமைச்சர் கோவி.செழியன் பதிலடி!
-
கொளத்தூர் : 2007 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பாட்டாக்கள் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“எல்லோருக்கும் இது பிப்ரவரி மாதம்! ஆனால், திமுக-வுக்கு இது ‘மாநாடு மாதம்!’” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
கொளத்தூர் கபாலீசுவரர் கல்லூரி : ரூ.31.45 கோடி செலவில் புதிய கட்டடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் !