India
“சிகரெட் தர்றியா.. இல்லையா” : இளம்பெண்ணை அடித்தே கொன்ற வாலிபர்.. டெல்லியில் ‘பகீர்' சம்பவம்!
டெல்லியில் உள்ள துவாரகா பகுதியில், பெண் ஒருவர் பெட்டிக்கடை நடத்தி வந்தார். அங்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர், அந்தப் பெண்ணிடம் சிகரெட் வேண்டும் என்று கேட்டுள்ளார்.
ஆனால், அவரிடம் உரிய பணம் இல்லாததால், அந்தப் பெண் சிகரெட் தர மறுத்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால், கடும் ஆத்திரமடைந்த அந்த வாடிக்கையாளர், அப்பெண்ணை, கடுமையாகத் தாக்கியுள்ளார். மேலும், கத்தியால் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த அந்தப் பெண், பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவத்தின்போது அங்கிருந்த மக்கள் கொலையாளியை கடுமையாகத் தாக்கினர். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் கொலையாளியை கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், கொலையாளி ராஜ்புரியை சேர்ந்த திலீப் என்பது தெரியவந்துள்ளது.
- கார்த்திகேயன்
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!