India
இளம் மனைவியை ரூ.500க்கு விற்ற கணவன்... பாலியல் வல்லுறவு செய்த நண்பன்... குஜராத்தில் கொடூர சம்பவம்!
ரூ.500க்கு தன் மனைவியையே கணவன் விற்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் 21 வயதான பெண் ஒருவர் தன் கணவர் தன்னை வேறொரு நபரிடம் ரூ.500க்கு விற்றதாக போலிஸால் புகார் அளித்துள்ளார்.
அவரது புகாரில், “இரண்டு நாட்களுக்கு முன்னர் இரவு 9 மணிக்கு நானும் என் கணவரும் உணவகத்திற்குச் சென்றோம். அப்போது அங்கு வந்த நபர் என் கணவரிடம் ரூ. 500 கொடுத்தார்.
இதையடுத்து என் கணவர் என்னை அந்த நபருக்கு விற்றுவிட்டார். பின்னர் அவர் என்னை மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவு செய்தார்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த புகாரையடுத்து பெண்ணின் கணவர் தீரஜ் ஜாங்கிட் மற்றும் பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட சோனு சர்மா ஆகியோரை போலிஸார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண் சிகார் பகுதியில் உள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
கணவனே மனைவியை தனது நண்பரிடம் ரூ. 500க்கு விற்ற இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”பவளவிழா கண்ட தி.மு.க பால்வாடி இயக்கத்திற்கு பாடம் புகட்டும்” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
”தமிழ்நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்”: அமைச்சர் தா.மோ.அன்பரசன் புகழாரம்!
-
இந்த தேர்தல் தமிழ்நாடு vs டெல்லிதான்..! அடிமை கூட்டணிக்கு மரண அடி காத்திருக்கிறது: அமைச்சர் கே.என்.நேரு!
-
“ஈகைப் பண்போடு ‘ரமலான்’ கொண்டாடும் இசுலாமியப் பெருமக்களுக்கு வாழ்த்துகள்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“வெல்வோம் உடன்பிறப்புகளே... 2026 தேர்தல் களம் நம்மை அழைக்கிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!