India
“பாலியல் வன்கொடுமை செய்து கருவைக் கலைக்க முயன்ற போது இளம் பெண் பலி” : உத்தர பிரதேசத்தில் கொடூர சம்பவம்!
உத்தர பிரதேச மாநிலம் மஹோபா என்ற கிராமத்தில் இளம் பெண் ஒருவர் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது ஷைலேந்தர் சிங் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இது குறித்து வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாக அந்த நபர் மிரட்டியுள்ளார். இதனால் அந்தப் பெண் யாரிடமும் கூறாமல் இருந்து வந்துள்ளார். இதையடுத்து சில நாட்கள் கழித்து அந்த பெண்ணுக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது.
அப்போது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதைக் கேட்டுப் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பிறகு அந்த பெண் நடந்த வற்றைப் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த சம்பவம் குறித்துப் பெற்றோர் போலிஸாருக்கு தெரியப்படுத்தவில்லை. பின்னர் அந்த பெண்ணுக்குக் கருவைக் கலைப்பதற்காக மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு சிகிச்சையின் போது அந்த பெண் பரிதாமாக உயிரிழந்தார். இதையடுத்து போலிஸார் பாலியல் வன்கொடுமை செய்த ஷைலேந்திர சிங்கும் மற்றும் மருத்துவர் உட்பட நான்கு பேரை போலிஸார் கைது செய்தனர்.
Also Read
-
இம்பீச்மெண்ட் நோட்டீஸ்: “நீதிபதி GR சுவாமிநாதன் தானே முன்வந்து பதவி விலகவேண்டும்..” - தொல்.திருமாவளவன்!
-
டிச.12 : படையப்பா முதல் F1 வரை.. ஒரே நாளில் திரையரங்கு மற்றும் OTT-ல் வெளியாகும் படங்கள் என்னென்ன?
-
பழனிசாமியின் பேச்சு: கூவத்தூர் முதல் கொரோனா வரை.. அதிமுகவின் கோரத்தை புட்டுப்புட்டு வைத்த அமைச்சர் ரகுபதி
-
பழனிசாயின் புலம்பலை மக்கள் நிராகரிப்பார்கள்; 2026 தேர்தலிலும் படுதோல்விதான் : ஆர்.எஸ்.பாரதி அறிக்கை!
-
டி.என்.பி.எஸ்.சி.யில் தேர்வு செய்யப்பட்ட 476 பேருக்கு அரசுப் பணிக்கான நியமன ஆணை! : முழு விவரம் உள்ளே!