India
“சிறுத்தையிடம் இருந்து குழந்தையை போராடி மீட்ட இளைஞர்” : மும்பை ஆரோ வனப்பகுதியில் நடந்த ‘திகில்’ சம்பவம்!
மகாராஷ்டிரா மாநிலம், மும்பை கோரேகாவ் அருகே ஆரே காலனி அடர்ந்த காட்டுப்பகுதியில் பழங்குடியின மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த காட்டுப்பகுதியில் சிறுத்தைகள் அதிக அளவில் காணப்படுகின்றன.
இந்நிலையில், ஆரோகாலனி பகுதியில் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை திடீரென அங்கு வந்த சிறுத்தை ஒன்று கவ்விக்கொண்டு காட்டுப்பகுதிக்குள் ஓடியது. இதைப்பார்த்துக் கொண்டிருந்த சிறுவனின் மாமா வினோத்குமார் உடனே தாமதிக்காமல் சிறுத்தையைப் பின்தொடர்ந்து சென்றுள்ளார்.
பிறகு தம்மை யாரோ தாக்க வருவதாக நினைத்து சிறுவனைப் புதருக்குள் போட்டுவிட்டு சிறுத்தை தப்பிச் சென்றுவிட்டது. உடனே சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்குச் சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தலையில் மட்டும் லேசான காயம் ஏற்பட்டுள்ளதால் சிறுவனுக்குக் கட்டுப்போடப்பட்டுள்ளது.
இது குறித்து வினோத் குமார் கூறுகையில், சிறுவனைச் சிறுத்தை தூக்கிச் ஓடியபோது நானும் பின்தொடர்ந்து சென்றனர். அப்போது சற்று தூரத்திற்குச் சென்ற சிறுத்தை சிறுவனைப் போட்டு விட்டு சற்று தள்ளி நின்று கொண்டிருந்தது.
உடனே நான் சிறுவன் மீது படுத்துக் கொண்டேன். இதைச் சிறுத்தை கவனித்துக் கொண்டிருந்தது. இதனால் என்னையும் தாக்கிவிடுமோ என்ற அச்சம் இருந்தது. பிறகு சிறுத்தை அங்கிருந்து சென்றுவிட்டது. பிறகு நான் சிறுவன் ஆயுஷை மருத்துவமனையில் சேர்த்தேன்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“எதிர்க்கட்சித் தலைவர் கைது.. பட்ஜெட் கூட்டத்தொடருக்குப் பயந்த பாசிச தவெக அரசு” : துரைமுருகன் கண்டனம்!
-
“இந்த கும்பல்தான் திடீர் ‘ஆபாச எதிர்ப்பு போராளி’கள்...” - உதயநிதி கைதுக்கு திமுக இளைஞரணி கண்டனம்!
-
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது... நீதிமன்ற உத்தரவை மீறி அராஜகத்தில் ஈடுபடும் தவெக அரசு!
-
“நாளை விவசாயிகளுக்கு ஆதரவாக கேள்வி எழுப்புவேன்..” - கர்ஜித்த உதயநிதி.. போலீசை ஏவிய தவெக அரசு!
-
காவிரி விவகாரம் : “கர்நாடகாவை பார்த்தாவது கற்றுக் கொள்ள வேண்டாமா?..” : விஜயை Left Right வாங்கிய முரசொலி !