India
கேம் விளையாட செல்போனை கொடுக்க மறுத்த தம்பி... கோபத்தில் அக்கா எடுத்த விபரீத முடிவு : மும்பையில் சோகம்!
மும்பை காந்தி வலி சமதா நகரைச் சேர்ந்த அக்காவும், அவரது தம்பியும் வீட்டில் இருக்கும் செல்போனில் கேம் விளையாடுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளனர். இதனால் இருவருக்குமிடையே அடிக்கடி சண்டை ஏற்படுவதுண்டு.
இந்நிலையில், வழக்கம்போல் முதலில் யார் செல்போனில் கேம் விளையாடுவது என்பதில் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது தம்பி தனது அக்காவிடம் போனை கொடுக்க முடியாது என கூறியுள்ளான.
இதனால் கோபமடைந்த அவர் வீட்டை விட்டு வெளியே சென்று, கடையில் எலி மருந்து வாங்கி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். பிறகு இதுகுறித்து தனது தம்பியிடம் தெரிவித்துள்ளார்.
இதைச் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவன் பெற்றோர்களிடம் இது குறித்து தெரிவித்துள்ளான். பிறகு பெற்றோர் பக்கத்து வீட்டில் இருப்பவர்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்தனர். உடனவே அவர்கள் வந்து சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறுமியின் உடல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
”தொழிலாளர்களை காத்து வரும் திராவிட மாடல்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ’மே தின’ வாழ்த்து!
-
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைக்கு PRO பிரதமர் மோடி : முரசொலி!
-
பாஜகவின் வண்டவாளத்தை அம்பலப்படுத்தும் Youtuber குறித்து அவதூறு பரப்பும் பாஜகவினர்... குவியும் கண்டனம் !
-
இங்கிலாந்து வாழ் இந்தியர்களாலும் வெறுக்கப்படும் மோடி!
-
இந்தியாவிற்கு அவப்பெயர் தேடி தந்த மோடி! : முதலீடு செய்ய தாமதிக்கும் Tesla!