India
கேம் விளையாட செல்போனை கொடுக்க மறுத்த தம்பி... கோபத்தில் அக்கா எடுத்த விபரீத முடிவு : மும்பையில் சோகம்!
மும்பை காந்தி வலி சமதா நகரைச் சேர்ந்த அக்காவும், அவரது தம்பியும் வீட்டில் இருக்கும் செல்போனில் கேம் விளையாடுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளனர். இதனால் இருவருக்குமிடையே அடிக்கடி சண்டை ஏற்படுவதுண்டு.
இந்நிலையில், வழக்கம்போல் முதலில் யார் செல்போனில் கேம் விளையாடுவது என்பதில் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது தம்பி தனது அக்காவிடம் போனை கொடுக்க முடியாது என கூறியுள்ளான.
இதனால் கோபமடைந்த அவர் வீட்டை விட்டு வெளியே சென்று, கடையில் எலி மருந்து வாங்கி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். பிறகு இதுகுறித்து தனது தம்பியிடம் தெரிவித்துள்ளார்.
இதைச் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவன் பெற்றோர்களிடம் இது குறித்து தெரிவித்துள்ளான். பிறகு பெற்றோர் பக்கத்து வீட்டில் இருப்பவர்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்தனர். உடனவே அவர்கள் வந்து சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறுமியின் உடல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!