India
“பகலிலேயே இருட்டாகும் அதிசய கிராமம்” : காரணம் என்ன தெரியுமா?
தெலங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டம் கொதுருபாகா கிராமத்தில் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்தக் கிராமத்தில் வாழும் மக்கள் அனைவரும் விவசாயத்தை பிரதான தொழிலாகக் கொண்டுள்ளனர்.
இந்தக் கிராமம் சுற்றிலும் மலைகளால் சூழப்பட்டுள்ளது. இதில் கிழக்கில் கொல்லமலையும், மேற்குப் பகுதியில் ரங்கநாயகன் மலையும் உள்ளது. ஓங்கி உயர்ந்துள்ள இந்த மலைகளால் காலை நேரத்தில் சூரியன் தாமதமாக உதிப்பதாகவும் மாலை நேரத்தில் சூரியன் முன்கூட்டியே மறைவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் மாலை 4 மணிக்கே இந்தக் கிராமத்திலுள்ள மலைகளில் சூரியன் மறைந்து கிராமமே இருளில் மூழ்குகிறது. இதுபோன்ற அதிசய கிராமம் இந்தியாவில் எந்த இடத்திலும் இல்லை, பகல் நேரங்களில் குறைந்து இரவு நேரம் அதிகரித்துள்ளதால் இங்குள்ள விவசாயம் சார்ந்த மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த காலநிலை மாற்றங்கள் அதிசயமாக பார்க்கப்பட்டு வருகிறது.
Also Read
-
“திருக்குறளை தேசிய நூலாக ஆக்க வேண்டும்!” : உலகப் பொதுமறையை பறைசாற்றிய முரசொலி தலையங்கம்!
-
மூலிகை அழகுசாதனப் பொருட்கள் & தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி - விண்ணப்பிப்பது எப்படி?
-
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்.. சென்னையில் முகாம்கள் நடைபெறும் நாள், இடங்கள் என்ன?- முழு விவரம் உள்ளே!
-
கடலூர், சிதம்பரம் மக்கள் கவனத்துக்கு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் என்ன ?
-
துணை வேந்தர் விவகாரம்... ஆளுநரின் நியமனம் செல்லாது : மீண்டும் மீண்டும் கொட்டுவைத்த உயர்நீதிமன்றம் !