India
“சார், மேடம் வேண்டாம்” - காலனித்துவ சொற்களுக்கு தடை விதித்த கிராம பஞ்சாயத்து!
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ளது மாத்தூர் கிராம பஞ்சாயத்து. நாட்டிலேயே முதல்முறையாக மாத்தூர் கிராம பஞ்சாயத்து நிர்வாகம் ‘சார்’, ‘மேடம்’ போன்ற வார்த்தைகளுக்கு தடை விதித்துள்ளது.
மாத்தூரில் சில நாள்களுக்கு முன்பு நடந்த கிராம பஞ்சாயத்து கூட்டத்தில் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டு இதுகுறித்த அறிவிப்பும், பஞ்சாயத்து அலுவலகம் முன்பு வைக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கால பயன்பாட்டு வார்த்தைகளான ‘சார்’, ‘மேடம்’ ஆகியவற்றிற்குப் பதிலாக மாற்று வார்த்தைகளைப் பயன்படுத்த மொழியியல் துறையிடம் பரிந்துரையும் கேட்டுள்ளனர்.
சரியான மாற்று வார்த்தைகள் கிடைக்கும் வரை பெயர் சொல்லியோ, அவர்களின் பதவியைச் சொல்லியோ அழைக்கலாம் என்றும், அரசு அலுவல் கடிதங்களிலும் சார், மேடம் போன்ற வார்த்தைகள் இடம்பெறக் கூடாது என்றும் முடிவெடுத்துள்ளனர்.
அரசு சேவை தொடர்பாக விண்ணங்களில் கீழ்ப்படிகிறேன், தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறேன் போன்ற வார்த்தைகளுக்குப் பதிலாக வேண்டுகிறேன், விரும்புகிறேன் போன்ற சொற்களைப் பயன்படுத்தலாம் என்றும் முடிவெடுத்துள்ளனர்.
அரசு அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் இடையேயான இடைவெளியைக் குறைக்கும் விதமான இம்முயற்சிக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
Also Read
-
“விஜய் போனது சக நடிகரை ஐஸ் வைக்கத்தானே தவிர முதலீடுகளை ஈர்ப்பதற்காக அல்ல!” : முரசொலி தலையங்கம்!
-
“வரலாற்றிலேயே இல்லாத டம்மி முதலமைச்சர்.. ஸ்டிக்கர் ஒட்டி பொய் பரப்புகின்றனர்” : உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
“ஸ்டிக்கர் ஒட்டாமல் புதிய முதலீடுகளை ஈட்டுவாரா முதலமைச்சர்?” : டி.ஆர்.பி.ராஜா கேள்வி!
-
“முதல்வருக்கு நாக்கில் நிதானம் வேண்டும்.. சட்டமன்றத்தில் கண்ணியம் இல்லை”: திருச்சி சிவா எம்.பி கண்டன உரை!
-
முதலமைச்சர் விஜய் தொகுதியின் அவலம்.. 6 நாட்களாக தண்ணீர் இல்லை.. கோபத்துடன் வீதியில் இறங்கிய மக்கள்!