India
“உன்னால எனக்கு பொண்ணு கிடைக்கல” : காதலியை குத்திக் கொலை செய்த காதலன் - கேரளாவில் பயங்கரம்!
கேரள மாநிலம், நெடுமங்காடு பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், இவரது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த ஆரியநாடு பகுதியைச் சேர்ந்த அருண் என்ற வாலிபர் திடீரென மாற்றுத்திறனாளி பெண்ணை கத்தியால் குத்தியுள்ளார்.
பின்னர் அங்கிருந்த அருண் தப்பிக்க முயன்றபோது தடுக்க வந்த பெண்ணின் பெற்றோரையும் தாக்கியுள்ளார். இவர்களின் சத்தம் கேட்டு அருகே இருந்தவர்கள் வருவதற்குள் அருண் தப்பிச் சென்றுள்ளார். பிறகு அருணை விரட்டிச் சென்ற பொதுமக்கள் அவரைப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
இதையடுத்து அருணை போலிஸிடம் ஒப்படைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாற்றுத்திறனாளி பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த கொலை குறித்து வழக்குப் பதிவு செய்த போலிஸார் அருணிடம் விசாரணை நடத்தினர்.
இதில், மாற்றுத்திறனாளி பெண்ணும், அருணும் ஏற்கனவே காதலித்து வந்துள்ளனர். பிறகு அந்த பெண் வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இதனால் மாற்றுத்திறனாளி பெண்ணை அருண் எங்கு பார்த்தாலும் தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளார்.
மேலும் இவர்கள் காதலித்தது ஊர் மக்களுக்குத் தெரியும் என்பதால் அருணுக்கு பெண் கிடைப்பதில் சிக்கல் இருந்து வந்துள்ளது. இதனால் பெண் கிடைக்காத விரக்தியில் அருண் மாற்றுத்திறனாளி பெண்ணை குத்திக் கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
Also Read
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!