India
காதல் தொல்லை.. மது வாங்கி கொடுத்து நண்பரை கொலை செய்த இளைஞர் : விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்!
கர்நாடக மாநிலம், பாகல் கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அனுமந்தா. இவர் சம்பவத்தன்று நண்பரைப் பார்த்து வருவதாகக் வீட்டில் கூறிவிட்டுச் சென்றுள்ளார். பிறகு இரவாகியும் அனுமந்தா வீட்டிற்கு வரவில்லை. இதனால் அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதையடுத்து கிராமத்திற்கு வெளியே இருந்த தோட்டம் ஒன்றில் அனுமந்தா சடலமாக இருப்பதைப் பார்த்து மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பிறகு அங்கு வந்த போலிஸார் அனுமந்தா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அனுமந்தா நண்பரின் தங்கையைக் காதலித்து வந்தது தெரியவந்தது. இது குறித்து நண்பர் கேட்டபோது அனுமந்தா மறுத்துள்ளார். இதையடுத்து சம்பவத்தன்று அனுமந்திற்கு மது வாங்கிக் கொடுத்து, இருவரும் ஒன்றாகக் குடித்துள்ளனர்.
அப்போது, நண்பர் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து அனுமந்தாவை சரமாரியாகக் குத்தி கொலைசெய்தது விசாரணை தெரியவந்தது. பின்னர் அனுமந்தாவின் நண்பரை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
”நிதியும் கிடையாது நீதியும் கிடையாது - தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பா.ஜ.க” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“இந்திய அரசியலில் மத வெறுப்பு அதிகரித்துள்ளது...” - நடிகை வித்யா பாலன் ஓபன் டாக் !
-
குஜராத் மாநிலத்தில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு : தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்த பா.ஜ.க வேட்பாளர்கள்!
-
கொளுந்துவிட்டு எரிந்த கட்டடம்... யோசிக்காமல் 50 பேரின் உயிரை காப்பாற்றிய துணிகர சிறுவனுக்கு பாராட்டுகள் !
-
”கொஞ்சம் கூட கருணை இல்லாத மோடி அரசு” : செல்வப்பெருந்தகை விமர்சனம்!