India
முதலிரவுக்காக வாடகைக்கு விடப்பட்ட பல்கலைக்கழக அறை.. அதிர்ச்சியில் மாணவர்கள் : ஆந்திராவில் பகீர் சம்பவம்!
ஆந்திர மாநிலம், காக்கிநாடாவில் ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. மேலும் இப்பல்கலைக்கழகத்தில் விருந்தினர் மாளிகை ஒன்று உள்ளது.
இந்நிலையில், பல்கலைக்கழகத்தின் விருந்தினர் மாளிகையில் ஆகஸ்ட் 18, 19 ஆகிய இரண்டு நாட்களுக்கு புதுமண தம்பதியினருக்கு முதல் இரவு நடத்துவதற்காக அறை வாடகைக்கு விடப்பட்டுள்ளது. பின்னர், அடுத்தாள் இந்த அறைக்குச் சென்ற அதிகாரிகள் அறைமுழுவதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் இது தொடர்பான வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து பல்கலைக்கழக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் அனுமதியின்றி தம்பதிகள் மற்றும் அவர்களின் உறவினர்களுக்கு இரண்டு அறைகள் வாடகைக்கு விடப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும், இது குறித்து பல்கலைக்கழக ஊழியர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை விசாரிக்கக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!