India
கொரோனா பாசிட்டிவ் வந்ததால் மன உளைச்சல்: தூக்கில் தொங்கிய தம்பதி - மங்களூருவில் பரிதாபம்!
கொரோனா தொற்று உறுதியானதால் மனமுடைந்த தம்பதிகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இன்று காலை கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே சுரத்கல் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சித்ராப்புரா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நடந்துள்ளது.
இங்கு உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ஆர்யா சுவர்ணா. இவரது மனைவி குணா சுவர்ணா. இவர்களுக்கு திருமணமாகி இருபது ஆண்டுகள் ஆகிறது. குழந்தை ஏதும் இல்லை.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் மனமுடைந்த இந்த தம்பதிகள் இன்று காலை முதலில் அவரது மனைவி குணா சுவர்ணா தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அதனை தொடர்ந்து மங்களூர் மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் உள்ளிட்ட பல்வேறு நபர்களுக்கு போன் செய்து தற்கொலை செய்துகொள்வதாக தெரிவித்துவிட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சுரத்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
மிரட்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் : ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை குறைக்கும் பா.ஜ.க அரசு திட்டம்!
-
கொழுந்து விட்டு எரிந்த சொகுசு பேருந்து : 25 பேர் பலி - ஆந்திராவில் நடந்த துயர சம்பவம்!
-
மனப்பாடம் செய்து படித்தாலும் தமிழ்நாட்டில் பழனிசாமி Failதான் ஆவார் : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
-
“A Sun from the south” : நூலினை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சர்வதேச போட்டியில் பங்கேற்கும் 33 வீரர்கள் : ரூ.43.20 லட்சம் நிதியுதவி வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!