India
சொந்தமாக ஹெலிகாப்டர் தயாரித்து சுதந்திர தினத்தில் பறக்க விட முயன்ற வாலிபர்... விபத்தில் பலியான சோகம்!
மகாராஷ்டிரா மாநிலம், புல்சவங்கி கிராமத்தைச் சேர்ந்தவர் ஷேக் இஸ்மாயில். இந்த வாலிபர் சொந்தமாகச் சிறிய ஹெலிகாப்டர் ஒன்றைத் தயாரிக்கும் பணியில் கடந்த இரண்டு வருடங்களாக ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், நாடே கொண்டாட உள்ள 75வது சுதந்திர தினத்தில் தான் தயாரித்த ஹெலிகாப்டரை பறக்க விட வேண்டும் என்பதற்காக இஸ்மாயில் இதற்கான சோதனை முயற்சியில் ஈடுபட்டார்.
அப்போது, ஹெலிகாப்டரில் பொருத்தப்பட்டிருந்த பிளேடு ஒன்று கழன்று இஸ்மாயில் தலையில் விழுந்தது. இதில் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் எவ்விதமான பாதுகாப்பு வசதிகளும் இல்லாமல் ஹெலிகாப்டர் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!